தூத்துகுடி செல்கின்றார் ரஜினி : செய்தி

நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த்

ஆக அரசியல்வாதி ரஜினியினை யாரும் விரும்பமாட்டார்கள் , அதுவும் ஆன்மீக அரசியல்வாதியினை சுத்தமாக விரும்ப மாட்டார்கள் என்பதும் அவருக்கே புரிகின்றது.

இதே எல்லைக்குள் ரஜினி நிற்பது நல்லது.


காவேரியில் ரஜினி என்னவோ சொல்லிவிட்டதால் கர்நாடகாவில் அவர் படத்தை விடமாட்டார்களாம்

இனி தமிழகமும் கன்னட நடிகர் நடிகைளுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டோம் என சொல்லிவிடுவதுதான் சரி

பாரதிராஜா இனி படம் இயக்கும் எண்ணத்தில் இல்லை, சைமனும் இல்லை என்பதால் அவர்களுக்கு நிம்மதி

கன்னட அட்டகாசம் எல்லை மீறுகின்றது. இவை எல்லாம் மிக மிக மோசமான காரியங்கள்

கன்னட நடிகை, நடிகர்களுக்கு உடனே கோடம்பாக்கம் தடை விதிக்கட்டும்


தூத்துகுடி செல்கின்றார் ரஜினி : செய்தி

அடுத்த வாரம் பட ரிலீசை வைத்துகொண்டு இது கூட செய்யாவிட்டால் எப்படி?

இப்பொழுதாவது செல்ல வேண்டும் என தோன்றிற்றே அதுவரைக்கும் நல்லது


கர்நாடக கனமழையில் பாதிக்கபட்ட மக்களுக்கு மோடி ஆறுதல் : செய்தி

ஆனால் தமிழகத்தில் துப்பாக்கியால் மக்கள் கொடூரமாக‌ சுட்டு கொல்லபட்டாலும் மனிதர் மூச் விடமாட்டார்.

அது அவர் அகந்தையின் மறுபக்கம்