தென்கொரியாவிலும் ஒரு ஜெயா- சசி போன்ற இரட்டையர்கள் …

Image may contain: 2 people, people standing and outdoor

ஜெயா சசிகலா போலவே தென்கொரியாவிலும் ஒரு இரட்டையர்கள் இருந்தார்கள், இப்பொழுது சிறையில் நூடுல்ஸ் உறிஞ்சுகின்றார்கள்

அதாவது தென்கொரியாவில் அதிபராக இருந்தவர் பார்க் கியூன் இவரின் நெருங்கிய தோழி சோய் சூன் சில். இருவரும் அங்கு செய்யாத அட்டகாசமில்லை, சுருட்டாத செல்வமில்லை

அது என்ன தமிழ்நாடா? சில நாட்களிலே இருவரையும் சிறையில் அடைத்தாயிற்று, இப்பொழுது தென்கொரிய சசிகலாவிற்கு 20 ஆண்டு சிறையும் பலகோடி அபராதமும் விதிக்கபட்டிருக்கின்றது

தென்கொரிய ஜெயலலிதாவிற்கு இன்னும் விசாரணை முடியவில்லை

ஆக உலகெலாம் தோழிகள் சிறைசெல்லும் காலம் போலிருக்கின்றது

ஆனால் அங்கெல்லாம் சின்னம்மா என ஒரு கூட்டம் கதறவுமில்லை, சின்னமாவின் குடும்பம் பின்னால் கூட்டமும் இல்லை

அந்த ஊழல் அதிபரின் படம் தென் கொரிய பாராளுமன்றத்தில் திறக்கபடவுமில்லை, அதனை கண்டு அமைச்சர்கள் கண்ணீர் சிந்தவுமில்லை

காரணம் உலகின் அதிவேக முன்னேற்றமான நாடுகள் வரிசையில் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது.

கூடவே தென்கொரியர்களுக்கு அறிவு இருக்கின்றது, மான உணர்ச்சியும் இருக்கின்றது