தென்னக எல்லையிலும் அந்த உரிமையை மீட்டு எடுங்கள்
அமித்ஷாவிடம் தமிழர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் அந்த கச்சத்தீவை மீட்க வேண்டாம் சர்வதேச அரசியல் படி அது முடியவும் முடியாது
ஆனால் அந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் அங்கு தங்கி ஓய்வு எடுக்கவும் வலை காய வைக்கவும் அதன் அருகே மீன் பிடிக்கவும் உரிமை உண்டு இந்திராகாந்தியும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் செய்து கொண்ட ஒப்பந்தம் அதை தெளிவாக சொல்லுகிறது
பின்னாளில் இலங்கை அதை மீறி துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அந்த உரிமையை இல்லாமல் செய்துவிட்டது பல காரணங்களுக்காக காங்கிரஸ் அரசு அதை மீட்கவில்லை இல்லை நிச்சயம் அது இந்தியாவிற்கு உள்ள உரிமை
எங்களை தமிழர் என்று ஒதுக்காமல் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை மீட்டுத்தாருங்கள் என தமிழர்கள் வேண்டுகின்றோம்
வட எல்லையில் இந்திய உரிமையை நிலைநாட்டிய நீங்கள் தென்னக எல்லையிலும் அந்த உரிமையை மீட்டு எடுங்கள்
உங்களை விட்டால் அதை செய்வதற்கு யார் இருக்கிறார்கள்
அமித்ஷா ஷா அவர்களே கச்சத்தீவில் உள்ள உரிமையை மீட்டு இந்தியரான தமிழனுக்குக் கொடுங்கள் தமிழகம் உங்களைக் கைகூப்பி வணங்கும் காலத்திற்கும் நீங்கள் அவர் மனதில் இருப்பீர்கள்
நிச்சயம் தமிழக கட்சிகள் அதனைச் செய்ய முடியாது காங்கிரசும் செய்யாது உங்களுக்கு மட்டுமே காலம் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது
அந்த நல்வாய்ப்பினை தமிழர் உரிமையை மீட்க பயன்படுத்தி வரலாற்றில் இடம் பெறுங்கள்