தென்னக கடற்கரையின் அர்த்தமற்ற அல்லேலூயா ….
தென்னகத்தின் கடற்கரையில் நடக்கும் போராட்டங்கள் வெகு பிரசித்தம். அணுவுலை கூடாது, ஸ்டெர்லைட் ஆலை கூடாது அப்படியே துறைமுகங்கள் கூடாது என பெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும்
இவ்விவகாரத்தில் ஸ்டெர்லைட் மட்டும் நிறுத்தபட்டது அது துரதிருஷ்டமசமானது, உண்மையில் அணுவுலைக்கு எதிராக வெற்றிபெற்ற அரசுகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் சொதப்பின, உளவுதுறைகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் சரியாக இருந்திருக்குமானால் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சிக்கல் வந்திருக்காது
உளவுதுறையின் தோல்வியே ஸ்டெர்லைட் சர்ச்சைக்கு காரணம் அதற்கு முழு காரணம் பழனிச்சாமி அரசு அதனோடு சேர்ந்து நிலமையினை கணிக்க தவறிய மத்திய அரசு என இரு அரசுகளும் காரணம்
ஆனால் கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசு அசைந்துகொடுக்கவில்லை, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் சரியாக காய்நகர்த்தி அந்த ஆலை முடங்காமல் பார்த்துகொண்டார்
இது மக்கள் குரல்வளையினை நெறிக்கும் செயல், நாசகார திட்டம் என்பதெல்லாம் சரியல்ல, இன்றைய உலகின் செய்திகள் தென்னக கடற்கரை மக்கள் எவ்வளவு மோசமாக ஏமாற்றபட்டிருந்தார்கள் நல்ல வேளையாக அரசுகள் அசைந்து கொடுக்காததால் அந்த மின்சார திட்டம் நடைமுறைக்கு வந்தது
இன்று மேற்குலகம் அணுவுலை பக்கம் சாய்கின்றது, அதற்கு மிகபெரிய காரணம் புட்டீன் உக்ரைன் பக்கம் செய்யும் “ரஷ்ய புரட்சி”
உக்ரைன் போரால் ஐரோப்பாவுக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்த எரிபொருளும் எரிவாயுவும் நிறுத்தபட்டன, இதர நாட்டில் இருந்து வாங்குவது பெரும் செலவாகி மக்கள் நிலை பரிதாபகரமானது
கொடும் வறட்சியால் நீர்மின்சாரமும் கைகொடுக்கவில்லை, காற்றாலைகள் எப்பொழுதும் சுற்றாது
இதனால் இப்பொழுது அணுவுலை ஒன்றே ஐரோப்பிய நாடுகளின் தேர்வாகின்றன, பல அணுவுலைகளை முன்பு மூடிய ஜெர்மனி எஞ்சிய உலைகளை இவ்வருடம் மூடபோவதாக அறிவித்த ஜெர்மனி அம்முடிவினை கைவிட்டு பழைய உலைகளையும் தூசு தட்டுகின்றது
பிரான்ஸ் தன் மின்சார தேவையில் 70 சதவீதம் அணுவுலையில் பெறுகின்றது, இன்னும் அதனை அதிகரிக்கபோகின்றது
பிரிட்டன் பெரும் அணுவுலை திட்டத்தில் இறங்கியிருகின்றது, போலந்துக்கு அமெரிக்கா அவசரமாக அணுவுலை கட்டி கொடுத்துகொண்டிருக்கின்றது
இவர்களெல்லாம் விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகள் ஆனால் அந்த விஞ்ஞானமே அவர்களுக்கு இந்த அவசியத்தையும் கொடுக்கின்றது
ஜப்பானும் இடையில் அணுவுலை வேண்டாம் என சொன்ன நாடு ஆனால் மின்சார தேவையினை சமாளிக்க முடியாமல் 8 அணுவுலைகள் தொடங்கபடுமென அறிவித்திருக்கின்றது, தென் கொரியாவும் அதையே பின்பற்றுகின்றது
தொழிற்சாலை, உற்பத்தி, மக்கள் விலைவாசி என எல்லாவற்றுக்கும் தீர்வு அணுவுலையில் இருப்பதாக அடைக்கலமாகின்றார்கள், அணுகழிவு ஆபத்துத்தான் ஆனால் அதனை பாதுகாப்பாக வெளியேற்றுவது எப்படி என்றும் இன்னும் அதன் ஆபத்தை முழுக்க குறைப்பது எப்படி என்றும் ஆய்வுகள் தொடர்கின்றன
அதாவது தங்கள் நாடுவாழ மின்சாரம் அவசியம், அந்த மின்சாரம் அணுமின் நிலையங்களில் எக்காலமும் தடையின்றி கிடைக்குமானால் அதை பெறுவதை தவிர வேறு வழியில்லை இல்லாவிட்டால் வாழமுடியாது எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள்
அதனில் தவறேதும் இருக்கமுடியாது
ஆக உலகமே அணுவுலை இன்றி இனி குறைந்தவிலை மின்சாரம் சாத்தியமில்லை, அந்த நுட்பத்தில் கார்பன் வெளியேற்றமில்லை என சரண் அடைந்திருக்கும் பொழுது, ஐரோப்பாவிலும் இன்னும் பல நாடுகளிலும் மக்கள் ஏற்றுகொண்ட, ஏற்றுகொண்டிருக்கும் பொழுது இந்தியாவின் தென்னக கடற்கரையில் மட்டும் ஏற்றுகொள்ளமாட்டோம் என்பது சரியல்ல
நல்ல வேளையாக அது முறையாக இயங்குகின்றது, நாட்டுக்கு மின்சாரம் தொடர்ந்து கிடைக்கின்றது
இப்பொழுது மேற்குலகம் ஏகபட்ட அணுவுலைகளை தொடங்கும் நிலையில் தமிழக இம்சையான சுப. உதயகுமாரன் போன்றவர்களை காணவே இல்லை , வரவே மாட்டார்கள்
அடுத்த தென்னக கடற்கரை போராட்டம் துறைமுகங்களை பற்றியது, துறைமுகம் வந்தால் மீன்பிடிக்கும் உரிமை இல்லாது போகும் என்பதெல்லாம் எப்படிபட்ட முட்டாள்தனமோ தெரியவில்லை
அப்படி இந்த கடல் மீன்பிடிப்பதற்கு என உலகில் எல்லாரும் நினைத்திருந்தால் லண்டன், மும்பை, நியூயார்க், ஷாங்காய், துபாய், சென்னை, சிங்கப்பூர் என பெரும் துறைமுகங்கள் உருவாகியிருக்காது
கடல் என்பது வளம், கடலில்லா நாடுகள் படும் சிரமம் சொல்லி மாளாது, மங்கோலியா, நேபாளம், ஆப்கன் , துர்க்மேனிஸ்தான் போன்ற நாடுகள் 4 பக்கமும் நிழலால் சூழபட்டு உப்புக்கு கூட அடுத்த நாட்டை எதிர்பார்க்கும் துர்பாகிய நிலையில் இருக்கின்றது
இந்தியா அவ்வகையில் கொடுத்து வைத்த நாடு, திறந்த கடல் மூலம் உலகெல்லாம் நம்மால் தொடர்பு கொள்ளமுடிகின்றது, வியாபாரம் செழிக்கின்றது
இத்துறைமுக திட்டம் மூலம் இந்தியாவும் வளரும், தமிழகமும் வளரும். ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்
வளர்ச்சி திட்டங்களை மக்கள் உரிமை பறிபோகின்றது என புறக்கணிப்பது பைத்தியகாரதனம். அப்படி வெறும் மீன்பிடி நிலையமாகவே இருந்திருந்தால் சென்னையும், மும்பையும் இப்படி வளர்ந்திருக்காது
முன்பு வாஜ்பாய் தலமையிலான மத்திய அரசு தங்க நாற்கரம் என நிலம்வழி சாலைக்கு பெரும் புரட்சிவடிவம் கொடுத்த நிலையில் மோடி அரசு சாகர்மாலா (கடல் மாலை) என்ற திட்டத்தை முன்னெடுக்கின்றது
இவ்வுலகினை எடுத்துகொள்ளுங்கள் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை எல்லா நாடும் துறைமுகங்களாலே செழித்தன, பொருளாதார வல்லரசாயின
நியூயார்க் முதல் சிங்கப்பூர், ஹாங்காங், என ஏராளமான விஷயங்களை காட்ட முடியும், இங்கெல்லாம் மீன்மட்டும் பிடிப்போம் என்றிருந்தால் அவை வளர்ந்திருக்காது.
சாகர்மாலா (கடல் மாலை) நிச்சயம் வரவேற்கதக்க திட்டம், மாற்றுகருத்தில்லை, வாஜ்பாயின் தங்க நாற்கரம் போலவே, மோடியின் சாகர்மாலாவும் அருமையான திட்டம்.
ஆனால் அதனை எதிர்ப்போம் என மறுபடியும் கிளம்பிவிட்டார்கள்
கடல் என்பது பெரும் வளம் அதனை கொண்டு ஒவ்வொரு நாடும் என்னென்னவோ செய்து முன்னேறுகின்றது, அந்த கடலில் நாங்கள் மீனைமட்டும்தான் பிடிப்போம், நாங்கள் சில மீன்பிடித்து வாழ தேசம் முன்னேறுவதை அனுமதிக்கமாட்டோம் என்பது சரியல்ல
இக்காலம் துறைமுகங்களின் காலம், கடற்கரையோர துறைமுகங்களால் தேசங்கள் வாழும் காலம் அதனை புரிந்துகொள்ளாமல் வெறும் மீன்மட்டும் பிடிப்போம் என்றால் காலமாற்றத்தில் வீழ்ந்துவிடுவோம்
தென்முனையில் இலங்கைக்கு அடி கொடுக்கும் விதமாக தமிழகம் மற்றும் கேரளத்தில் சில துறைமுகங்களை மத்திய அரசு கட்டுகின்றது
இது கட்டபட்டால் கொழும்பு பாதிக்கபடும் அல்லது இந்தியாவின் ஆதிக்கம் அங்கு மேலோங்கும்
இன்னும் தென்னக மக்களுக்கு பெரும் வாழ்வும் வளமும் தொழில்வாய்ப்பும் பெருகும், அதைத்தான் அம்மக்களும் அவர்கள் பின்னால் இருந்து பாதிரிகளும் எதிர்க்கின்றார்கள்
தமிழன் பிழைக்க சிங்கப்பூர், துபாய் என துறைமுகத்தால் வாழும் நகரங்களுக்கு ஓடுவதும், எங்கள் ஊரில் மீன்மட்டும் பிடிப்போம் என பின் தங்கி இருப்பதும் சரியல்ல
இந்த போராட்டங்களையும் அதன் பின்னால் இருக்கும் கிறிஸ்தவ பாதிரி கும்பல்களையும் முழு பலத்துடன் ஒடுக்கி, கூடங்குளத்தில் ஒடுக்கியது போல் ஒடுக்கி நாட்டுக்கு தேவையான துறைமுகங்களை கொண்டுவருவது அரச கடமை
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய மாகாண அரசுகள் சொதப்பியது போல் அல்லாமல் கூடங்குள போராட்டத்தை ஒடுக்கியது போல ஒடுக்கி துறைமுகங்கள் தென்னகத்தில் பெருக வழிசெய்தல் வேண்டும்
அதனை வெகுவிரைவாக அரசுகள் செய்வது நல்லது, நாட்டின் அவசிய தேவை அதுதான்
இங்கு பாதிரிகள் செய்வது மக்கள் நலன் அல்ல, இதனில் மத அரசியல் ஒளிந்திருக்கின்றது. பின் தங்கிய நிலையிலும் வெறும் மீன்மட்டும் பிடித்து ஊரும் உலகமும் அறியா நிலையில் இம்மக்கள் இருந்தால்தான் தங்கள் செல்வாக்கும் மதமும் நிலைக்கும் என சுயநல கணக்கில் இருக்கின்றார்கள் பாதிரிகள்
அந்த இடம் பெரிதாக வளர்ந்தால் பல தொழில் வரும், பல இனம் குவியும் அதனால் தங்கள் பிடியும் செல்வாக்கும் சரியும் என திட்டமிட்டுத்தான் பாதிரிகள் இவர்களை தூண்டிவிடுகின்றார்கள்
தென்னக கடலோரங்களில் இந்துக்கள் எங்கும் வளர்ச்சி திட்டம் வேண்டாம் என சொல்லி யாரும் பார்த்ததில்லை, போராடி கண்டதில்லை அவர்கள் வரவேற்கின்றார்கள்
எல்லா குழப்பங்களையும் கிறிஸ்தவ பாதிரிகளே தூண்டிவிடுகின்றார்கள்
இதனில் கிறிஸ்தவபிடி அரசியல் இருக்கின்றது, அதை கொண்டு தேசத்தை எதிர்க்கும் தேசவிரோதம் இருக்கின்றது , எதிரி நாடுகளின் உளவுதுறை ஊடுருவலும் இருக்கின்றது
இதனையெல்லாம் உணர்ந்து மத்திய மாகாண அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து துறைமுகங்களை கொண்டுவரட்டும், இதற்கு பாதிரிகள் தடை என்றால் அவர்களை பிடித்து உள்ளே போட தயங்க கூடாது
முதலில் அவர்கள் இந்தியாவின் பிரஜைகள் அதன் பின்புதான் பாதிரிகள், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியாக நிற்பவன் நல்ல குடிமகனாக இருக்கவும் முடியாது அவனை தேசவிரோத வழக்கில் தண்டிக்க அரசுகள் தயங்கவும் கூடாது