தென் தமிழக தொகுதிகள் நிலை

தென் தமிழகத்தின் பிராதன தொகுதிகள் மூன்று நெல்லை, குமரி மற்றும் தூத்துகுடி

இதில் தூத்துகுடி கனிமொழிக்கு என்பதாலும் அங்கு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மறைமுகமாக ராதிகா செல்வி என பல பலம்வாய்ந்த கைகள் இருப்பதாலும், இன்னும் பல காரணங்களாலும் அதை திமுகவிற்கு எழுதி வைத்து விடலாம்

ஏதும் மாறிதொலைந்தால் சாட்சாத் உட்கட்சி விவகாரமாக இருக்குமே அன்றி வேறல்ல‌

கன்னியாகுமரி தொகுதி பொன்னார் கோட்டை, பெரும் அதிருப்தி என ஏதுமில்லை

மனிதர் வாஜ்பாய் வகையறா, பிரம்மச்சாரி என்பதுடன் குடும்பத்தார் ஆதிக்கம், ஊழல் இன்னபிற சர்ச்சைகள் எல்லாம் அவர் மேல் இல்லை. சில பல விஷயங்களை செய்திருப்பதாலும் அப்பகுதியின் முகம் ஒன்று டெல்லிவரை தெரிவதாலும் பெரும்பாலும் அத்தொகுதி மக்கள் அவரை விடுவதாக தெரியவில்லை

மிக வலுவாக அவர்கள் பதிந்துவிட்ட பகுதி அது, இன்னொருவர் இனி வென்றுவருவது மிகபெரும் சவால்

பெரும் கோடீஸ்வரர் வசந்தகுமார் கன்னியாகுமரியில் கடந்தமுறை பொன்னாரிடம் 1.3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதால் இம்முறை அங்கு செல்லவில்லை போல் தெரிகின்றது

நாடார்களுக்கு பாதுகாப்பான தொகுதி என்றாலும் நாடாரான பொன்னாருக்கு சவால் கொடுப்பது அவரால் முடியவில்லை

பெரும் கோடீஸ்வரர், குமரி அனந்தனின் தம்பி என்றாலும் அங்கு அவர் வெல்ல முடியவில்லை

ஆக தூத்துகுடி, கன்னியாகுமரி முடிவான நிலையில் நெல்லை தொகுதி மீதமிருக்கின்றது

இதுதான் இப்பொழுது மிகபெரும் சவால், அதுவும் திருச்செந்தூர் தொகுதி கலைக்கபட்டு நெல்லையில் சேர்க்கபட்டபின் காட்சிகள் மாறுகின்றன‌

நெல்லை பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கும் நிச்சயம் சீட் கிடைக்கும் என்றாலும், டிடிவி தினகரன் வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயம் அது அவருக்கு சவால், சந்தேகமில்லை

திமுகவிற்கு வாய்ப்பு உண்டு என்றாலும் உட்கட்சி நிலவரம் சரியாக இல்லை, ஏகபட்ட கோஷ்டிகள் அவர்களின் வாரிசுகள் என கடும் சிக்கல்கள்

நெல்லை என் எல்லை என கலைஞர் சொன்னது இன்னும் அப்படியேதான் இருக்கின்றது, சந்தடி சாக்கில் காங்கிரஸ் பக்கம் தலமை தள்ளிவிடவும் வாய்ப்பு பிரகாசம்

அப்படி ஒதுக்கும் பட்சத்தில் திமுக செயல்தலைவரும் நாங்குனேரி எம்.எல்.ஏவுமான வசந்தகுமாரின் கை ஓங்கும் என்பது உறுதி

தினகரன் ஒதுங்கினால் அத்தொகுதி நாகேந்திரனுக்கு வெற்றி கொடுக்கலாம், இல்லையேல் திமுக அல்லது காங்கிரஸ் தட்டி கொண்டு சொல்லும்

ஆக அப்பகுதியில் நெல்லை தொகுதிமட்டுமே தண்ணி காட்டும் தொகுதி மற்ற இரண்டும் ஓரளவு முடிவு தெரிந்த தொகுதிகள்

தென்காசி அருணாச்சலம் தீவிர அரசியலில் இருந்தவரை பழைய கன்னியாகுமரி போல காங்கிரஸ் கோட்டையாக இருந்தது பின் காட்சிகள் மாறின‌

இப்பொழுது அதிமுக கையில் இருந்தாலும் பிளவுபட்ட கட்சிக்கு வாய்ப்பு குறைவு

அதனால்தான் தோற்கும் தோல்வி கிருஷ்ணசாமி பொறுப்பாக இருக்கட்டும் என தள்ளிவிட்டிருக்கின்றார்கள்