தென் மாநிலங்கள் தனிநாடாக பிரிய நேரிடும் : மல்லிகார்ஜூன கார்கே
தென்னிந்தியர்கள் குறித்து தருண் விஜய் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே பதிலடி , தென் மாநிலங்கள் தனிநாடாக பிரிய நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத்தான் அன்றே திராவிடநாடு என பெரியார் சொன்னார், இன்று இவர் தென்மாநிலங்கள் என சொல்கின்றார், சொல்லட்டும்
இவ்வளவிற்கும் கார்கே நானே பொறாமைபடும் அளவிற்கு நிறமானவர், அவரே கறுப்பர்கள் என சொன்னதற்கு கோபபட்டுவிட்டாரென்றால், நமக்கெல்லாம் எவ்வளவு ஆக்ரோஷம் வரவேண்டும்
ஆக நமது “நாம் கறுப்பர்கள்” அமைப்பிற்கு தென்னிந்தியா முழுக்க, ஆப்ரிக்கா, மேற்கு இந்தியா, அமெரிக்கா முழுக்க பெரும் ஆதரவு குவியும் என்பது உறுதி..
ஆனால் இந்த வகையில் சிங்களனும் அல்லவா சேர்ந்து தொலைவான்? எப்படி சேர்க்கமுடியும்?
என்ன ஒரு தர்மசங்கடமான நிலமை?, இப்படி ஒரு இக்கட்டு யாருக்கும் வர கூடாது..
அவனை இனம் சேரா இனமாக அறிவித்து பழிவாங்கிவிடலாம்..