தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்

“தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” என ஒரு புத்தகம் வந்திருக்கின்றது, எழுதியிருப்பது திராவிட அழிச்சாட்டிய எழுத்தாளர் கிருஷ்ணவேல் டி.எஸ் என்பவர்

வாழ்த்துரை எழுதியிருப்பது சுப.வீரபாண்டியன் , அணிந்துரை எழுதியிருப்பது கோ.வி லெனின் என்பவர் , நக்கீரன் பொறுப்பாசிரியராம்

புத்தகம் என்ன சொல்கின்றது?

புத்தமதத்தை அழித்து ஆரிய பார்பானியம் எல்லா இந்து ஆலயங்களையும் கைபற்றியது, திருப்பதியும் அப்படித்தான் , அது புத்த ஆலயம், பின்பு இந்துக்கள் மாற்றினார்கள் என ஒரு பகுதி

ஆனால் ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்திய நாடுகளை, பின் புத்தமும் சமணமும் ஆட்கொண்டு மறுபடி இந்துமதம் சங்கரர் காலத்தில் தழைத்ததை பற்றி ஒரு வார்த்தையில்லை

அசோகர் புத்தமதம் தழுவி போரை தவிர்த்தார், ராணுவத்தை பலமிழக்க செய்தார். ராணுவ பலமிழந்த அரசு என்னாகும்? திபெத் போல முணங்கிகொண்டிருக்கும், சீனா அமுக்கியது போல அமுக்கிவிடுவார்கள்

அப்படி புத்தமதம் வழக்கொழிந்து, அரசுகளும் வலுவிழந்து இந்து அரசு வந்தது

இதனை எல்லாம் சொல்லவில்லை, மாறாக இந்து பார்ப்பனர்கள் புத்தர்களை விரட்டி ஆலயத்தை கைபற்றினார்கள் என பயங்கர பொய்

இந்து ஆலயம் புத்த ஆலயமாக மாறி, அதன் பின் மறுபடி இந்து ஆலயங்களாக மாறின‌

இன்னொரு அட்டகாசம், புத்த துறவிகள் காட்டும் முத்திரையும், இந்து சாமிகள் சிலை முத்திரையும் ஒன்றுபோல் இருக்கின்றதாம்

பின்னே இந்துமதத்து யோக முத்திரைகளை புத்தமதம் எடுத்தால் புத்தரின் கை அந்த யோக அடையாளத்தைத்தான் காட்டும், இதில் என்ன வாதம்?

அடுத்து சொல்கின்றார்கள், கிறிஸ்து சிலுவையில் அறையடவில்லையாம், காரணம் சொல்கின்றார்கள் பாருங்கள்

இயேசு பிடிபட்டபொழுது 80 மைலுக்கு அங்கிருந்த ஏரோது என்பவனும், பிலாத்தும் மாறி மாறி ஒரே இரவில் விசாரித்திருக்க முடியாதாம், அப்படி ஏரோது ஜெருசெலேம் வந்திருந்தாலும் முடியாதாம்

நடந்தது என்ன?

அன்று பாஸ் ஓவர் பண்டிகை, எல்லா வாரத்தையும் விட அது யூதர்களுக்கு ஸ்பெஷல்

சனிகிழமை ஓய்வுநாள் என்றால் ஒருவேலையும் யூதன் செய்யமாட்டான், இன்றும் எருசலேமில் அவர்களுக்கு தனி லிப்ட் உண்டு, அதாவது சனிகிழமை அது ஒவ்வொரு தளமாக நின்று செல்லும், ஆம் பட்டனை தொட்டாலும் வேலையாம்

இன்றே இப்படி இருக்கும் இனம் அன்று எப்படி இருந்திருக்கும்?

அந்த பெரும் சனிகிழமைக்காக தயாரிப்பில் இருந்தது யூத இனம்

அந்த பாஸ் ஓவர் என்பது வெள்ளிகிழமை கொண்டாடபடும், வியாழன் அதற்கான ஆயத்த நாள், ஆக இயேசு பிடிபட்டது அன்று தான்

ஏரோது யூதர்களின் மன்னன், அந்த எருசலேம் கோவிலை அவன் கட்டியிருந்தான். பண்டிகைக்கை அவனும் வந்திருந்தான் , ரோமரின் பிரதிநிதி பிலாத்து அவனும் அங்குதான் இருந்தான்

இருவரும் பகைவர்கள், என்ன பகை என்றால் பிலாத்து ரோமானிய ஆளுநர், ஏரோது உள்ளூர் வட்ட செயலலாளர்

ஆனால் இயேசு மீது குற்றம் சாட்டியது யூத மேலிடம் என்பதால் பிலாத்து அவரை ஏரோதிடம் அனுப்பினான், ஏரோது தனக்கு இருந்த நோயினை தீர்க்க சொல்லி இயேசுவிடம் கேட்டதாக செய்தி, இயேசு மறுக்க மறுபடி பிலாத்திடம் அனுப்பினான் ஏரோது

பிலாத்துவிற்கு இயேசுவினை விடுவிக்க ஆசை, ஆனால் உள்ளூர் கலகத்திற்கு பயந்தான். ஏரோதோ தனக்கு அதிசயம் செய்யா இயேசு சாகட்டும் என்றிருந்தான்,

அவன் மன்னனாக நீடிக்க யூதகுருக்கள் ஆதரவு அவசியம் என்பதால் அவனும் அமைதியானான்

பிலாத்துவிற்கு இயேசு குற்றமற்றவர் என தெரிந்தும், மனைவியின் சொல்கேட்டு மனதை கல் ஆக்கினான்,

((இயேசுவினை விடுவித்தால் யூதர்கள் கலவரம் செய்து தன் குடும்பத்தை கொன்றுவிடுவார்கள் என அஞ்சினாள் பிலாத்துவின் மனைவி கிளாடியா)

இயேசுவினை கொல்ல சொல்லி, தனக்கு அவர் ரத்தத்தில் சம்பந்தம் இல்லை என பிலாத்து கைகழுவிட்டு சென்றுவிட இயேசு சிலுவையில் அறைய கொண்டு சென்றார்கள்

இன்றைய எருசலேமின் கிழக்கு எருசலேமில் அது நடந்தது. அந்த எருசலேம் அன்று மாநகர் அல்ல, ஒரு கோட்டைக்குள் இருக்கும் ஊர், பிலாத்தும் ஏரோதும் அருகருகே தான் தங்கி இருந்தார்கள்

இன்னொன்று மகா பெரும் திருவிழாவிற்கு தயாரான காலத்தில் எல்லா அரசு உத்தியோகஸ்தர்களும் பணியிலே இருந்தார்கள்

ஆக ஒரே இரவில் இயேசுவினை விசாரித்திருக்க முடியாது, என சொல்லபடுவதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாத விஷயம்

அவரை கொல்லவேண்டும் என்ற மாபெரும் அவசரத்தில் இருந்த யூத மேலிடம் மிக மிக சுருக்கமாக விசாரணையினை முடிக்க வைத்தது, கொலைக்கு அதிகாரமும் பெற்றுகொண்டது

இயேசு கொலை என்பது நீண்டநாள் திட்டமிட்டு, இயேசு சிக்கியதும் மிக அவசராமாய் யூத குருக்கள் நடத்திகாட்டிய கொலை

பைபிளை ஆழ அவர் வாசித்திருந்தால் இப்படி அபத்தமாக எழுதமாட்டார், இயேசு உயிர்தெழவில்லை அவர் சாகவில்லை என இஷ்டத்திற்கு அழிச்சாட்டியம்

கல்லறையில் இருந்த இயேசு மயக்க தெளிந்து கல்லை புரட்டி வெளிவந்தாராம், இவர் சொல்கின்றார்

அக்கல் 4 பேர் சேர்ந்து புரட்டும் அளவு எடையானது, மேலும் காவலர்கள் வேறு இருந்தார்கள். அது சீல் வைக்கபட்டு இருந்தது. அப்படி இயேசு வெளிவந்தால் காவலர்கள் மண்டையில் போட்டிருக்க மாட்டார்களா?

செங்கடல் எப்படி பிளந்ததாம் என்றால் கன்னியாகுமரி பக்கம் கண்டம் மூழ்கியதாம், அப்பொழுது செங்கடல் வற்றி உள்வாங்கியதாம்

செங்கடல் இரண்டாக பிரிந்ததாகவே வரலாறு சொல்கின்றதே அன்றி அது வற்றி போனதாக எங்கும் சொல்லபடவில்லை

குமரிகண்டம் இருந்த காலமும், செங்கடல் பிளந்த காலமும் காலத்தால் மிகுந்த வேறுபட்டவை.

பெரும் அபத்தமும், பயங்கர பொய்களும் நிரம்பிய இந்த புத்தகத்திற்கு போராளி சுப.வீரபாண்டியன் அணிந்துரையாம். அன்னார் மீதுள்ள பிம்பம் நொறுங்கிற்று

கோவி லெனின் என்பவர் வாழ்த்துரையாம்

இந்த பதிப்பகத்தார் என்பவர்கள் யாரென தெரியவில்லை. எவன் எதனை எழுதி கொடுத்தாலும் பதிப்பித்துவிடுவார்கள் போல‌

மிக மிக பயங்கரமான பொய்களும், அடிப்படையே இல்லாத வாதங்களுமாய் அப்புத்தகம் இருக்கின்றது

கொஞ்சமேனும் அறிவு வேண்டும் என நினைப்பவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது , இல்லாவிட்டால் எதற்கெடுத்தாலும் இல்லை இல்லை என தலையாட்டும் மாடு போன்ற மனநிலை வந்துவிடும்

இப்படி பகுத்தறிவு பேசுபவர்கள் இஸ்லாம் பற்றி பேசுகின்றார்களா என்றால் இல்லை, ஒரு வரியும் இல்லை

இரண்டாம் பெரியமதம் பற்றி ஒருவார்த்தை இல்லை

முகமது நபி வெள்ளை குதிரையில் ஏறி பரலோகம் சென்றுவிட்டு யெருசலேமில் இறங்கிய சம்பவம் பற்றி எல்லாம் ஒருவரி இல்லை

ஆக பகுத்தறிவு என்பது என்ன தெரியுமா?

எவன் போட்டு சாத்துவானோ அவனிடம் பம்மிகொள்வது. எவன் அழுதுவிட்டு கண்ணீரை துடைத்துவிட்டு செல்வானோ அவனிடம் முஷ்டி தூக்கி புரட்சி செய்வது

விடுமுறையில் ஒரு குஷ்பு படம் பார்த்திருப்பேன், அந்த பொன்னான நேரத்தை இந்த குப்பை புத்தகம் பறித்துவிட்டது