தேசத்தின் கவசம் மோடி!

ஒரு விஷயம் ஆச்சரியமானது, தற்செயலாக நடக்கும் விஷயங்களில் கூட இவ்வளவு முன்னேற்பாடுகளை காலம் செய்யுமா என்ற மகா விசித்திரமான உண்மைகளை கொண்டது
கடந்த 5 ஆண்டுகளாக உலகில் சில நாடுகளில் சர்வாதிகார அல்லது இரும்பு தலைவர்கள் வந்தார்கள், அதுவரை அத்தேசங்கள் அப்படி கண்டதில்லை
சீனாவின் நிரந்தர தலைவரானார் ஜின் பெங், ரஷ்யாவின் சர்வாதிகாரியானார் புட்டீன்
இலங்கையில் ராஜபக்சே குடும்பம் இரும்பு பிடி குடும்பமானது, துருக்கியில் எர்டோகன் வந்தார், ஜெர்மனியின் ஏஞ்சலா ஐரோப்பாவினை ஆட்டி வைத்தார்
சக்தி வாய்ந்த அரபு நாடுகளை பற்றி கேட்கவே வேண்டாம், நிரந்தர தலமை
என்னடா இது? உலகெல்லாம் சர்வாதிகாரமும் இரும்பு தலைவர்களும் கொண்ட அதிபர்களெல்லாம் வருகின்றார்கள் என உலகமே குழம்பியது
டிரம்ப் கூட இதனையெல்லாம் கண்டு “எவண்டா அமெரிக்காவுல தேர்தல் வச்சது? அந்த வாஷிங்க்டன் ஹாமில்டனெல்லாம் அறிவுகெட்ட்வனுக, இப்போ எனக்கில்ல கஷ்டம்..” என பொறுமிகொண்டிருந்தார்
எதற்கு இப்படி தனி தலைவர்கள் வந்தார்கள் என்பதன் விடை கொரோனாவில் கிடைத்தது
ஆம் ஜின்பெங்கின் அதிகாரம் சீனாவினை காத்தது, புட்டீனின் அதிகாரம் ரஷ்யாவினை காத்தது
ராஜபக்சேக்கள் இலங்கையினை அட்டகாசமாக காக்கின்றார்கள், எர்டோகன் மேற்காசியாவுக்கு வகுப்பெடுக்கின்றார்
குழப்பமான நிலையிலும் காசு பணம் உதவி என களத்தில் நிற்கின்றது ஜெர்மனி
ஒவ்வொரு நாடும் அதன் அதன் இரும்பு தலைவன் வழியில் தன்னை காக்கின்றது
இப்பொழுதுதான் மோடி ஏன் இரண்டாமுறை இத்தேசத்து இரும்பு தலைவனாய் அமர்ந்தார் என்பதை இந்தியரும் புரிந்து கொள்கின்றார்கள்
இப்படி மகா அறுதிபெரும்பான்மையில் சிக்கல் இன்றி பிடுங்கல் இன்றி கொஞ்சமும் ஆட்சி பயமின்றி மோடி அமர்ந்திருப்பதாலே நெருக்கடி தேசத்தில் தேசம் பலமாய் நிற்கின்றது
இதுவே கூட்டணி ஆட்சி என்றால் அவர்கள் கூட்டம் போட்டு ஆலோசிப்பதற்குள் கொரோனா பாராளுமன்றத்திலே புகுந்திருக்கும்
பல நாடுகளை போல பாரததுக்கும் காலத்தின் கடாட்சம் கிடைத்திருக்கின்றது, அந்த கடாட்சத்தின் பெயர் மோடி
காலமே கொடுத்த அந்த மாபெரும் தலைவனின் தலமையில் கொரோனாவினை பலமாக எதிர்த்து வென்று கொண்டிருக்கின்றது தேசம்
தேசத்தின் கவசம் மோடி..