தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கின்றார் ராஜபக்சே

இனி அவ்வளவுதான் ராஜபக்சே குடும்பம் என்றார்கள், சசிகலா குடும்பம் போலவே ஏகபட்ட வழக்குகள் பாய்ச்சபட்டன‌

ராஜபக்சே குடும்பமே காலி என செய்திகள் வந்தாலும், தேர்தலில் அவர் விஸ்வரூபம் எடுக்கின்றார், கடந்தமுறை மிக சிறிய இடவெளியில்தான் அவர் மைத்திரியிடம் தோற்றார்

இப்பொழுது விரைவில் ராஜபக்சே குடும்பம் மீது தீர்ப்பு வரும் நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார்.

தமிழர் வாழும் பகுதியிலும் ராஜபக்சே பெருவெற்றி பெற்றிருக்கின்றார் என்பதுதான் ஆச்சரியம், இனி இந்த இனபடுகொலை, தமிழர் வெறுப்பு எல்லாம் எந்த சபையிலும் ஏறாது.

போகிற போக்கில் ராஜபக்சே இலங்கையின் “டிடிவி தினகரன்” என பட்டம் போட்டுகொண்டாலும் ஆச்சரியமில்லை போலிருக்கின்றது