தேர்தல் அறிக்கை – டிடிவி
டிடிவி தினகரனும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்
விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறே அமைத்து தருவோம் என்பதில் இருந்து வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தனி வாரியம் அமைப்போம் என்பது வரை முழங்கியிருக்கின்றார்
அது எப்படி மத்திய அரசில் வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தனி வாரியம் அமைப்பார்கள்?
மதுபான ஆலையினை மூடுவார்களாம், ஏன் மிடாஸை இபொழுதே மூடினால் என்ன என்றால் மூடமாட்டார்கள்
இருக்கட்டும் இது மக்களுக்கு வாசிக்கபட்ட அறிக்கை
ஆனால் கட்சிக்குள் வாசிக்கபட்ட அறிக்கை என்னவாக இருக்கும்?
தேர்தல் முடிவில் அந்த பன்னீர் செல்வத்தையும் பழனிச்சாமியினையும் பாலா பட ஹீரோக்கள் போல ஆக்கிவிட வேண்டும்
“அவன் இவன்” படத்து ஆர்யா விஷால் போல இருவரையும் ஆக்கியே தீரவேண்டும்.