தேர்தல் துளிகள் 07/03/2019 (1)

கலைஞர் இருந்திருந்தா “தம்பி இரு இடம் வேண்டுமா? இதயத்தில் இடம் வேண்டுமா?”னு கேட்டு உருக வச்சிருப்பாரு புள்ள‌

இவனுக இதயத்தில் இடம் வேணுமான்னு கூட கேட்கல புள்ள அதான் வருத்தமா இருக்கு…

ஆமாங்க, பால் காலியாயிட்டுன்னு கூட சொல்லியிருக்கலாம்

*********

அக்கட்சி ராமசந்திரன் காலத்திற்கே திரும்பிவிட்டது

ஆம் யார் வலுவான தலைவரோ அவர்கள் காலில் விழுவதில் என்றுமே அதிமுகவிற்கு வருத்தமே இருந்ததில்லை

இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை

********

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி : சரத்குமார்

கட்சியில் இருப்பது இவர் ஒருவர்தான், 39 இடங்களிலும் எப்படி போட்டியிடுவார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி

********

விருதுநகரில் ஸ்டாலின் மாநாடு

52 ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜரை ஒழிக்க இதே விருதுநகரில் படாதபாடுபட்ட கட்சி திமுக

இப்பொழுது அதே விருதுநகரில் காங்கிரசுக்காக உழைக்க போகின்றது

வரலாறு திரும்புவது என்பது இதுதான்

********

இந்த 40 எனும் எண்ணோடு தமிழகம் படும்பாடு மிக பெரிது

ஒருபக்கம் கிறிஸ்தவர் 40 நாள் விரதம் என படாதபாடு படுத்துகின்றார்கள்

இப்பக்கம் ஸ்டாலின் “40 நமதே நாடும் நமதே” என பேசிகொண்டிருக்கின்றார்

மோடி திடீர் ராமசந்திரன் ரசிகனாகி “நாளை நமதே நாற்பதும் நமதே” என கடும் அழிச்சாட்டியம்

திரும்பும் இடமெல்லாம் இந்த 40 இம்சை தாளவில்லை

*********

சின்னமென்னமோ தோப்பு
ஆனால் காலமெல்லாம் தனிமரம்தான்

பாபநாசம் பண்ணையாரின் பரிதாப சோகமிது

*********

“எல்லாம் இந்த பயவுள்ளையால வந்தது மக்கழே..

வாய வச்சிட்டு சும்மா இருக்கானா? எல்லா பயலும் என் வீட்டு வாசல்ல நிக்குறான்னு எகத்தாளம் பேசினான், அவனுக வச்சி செஞ்சிட்டானுக‌

அப்பன தெருவுல விட்டுட்டு இவன் நிக்குற ஸ்டைல பாருங்க மக்கழே.. .

ராமதாஸ் , கலைஞர் மாதிரி எனக்கும் பிள்ளைங்க சரியில்ல மக்கழே…

எனக்கு அவமானங்களா இருக்கு”

“ஏ மூணு முடிச்சால முட்டாள ஆனேன்
கேளு கேளு தம்பி…

நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேறுக்குள்ள…”