தேர்தல் துளிகள் 08/03/2019
ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் : ராஜேந்திர பாலாஜி
மோடி ஒரு “தாயுமானவர்” என்கின்றார் அமைச்சர்
“அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே..” என விரைவில் அவர்கள் பாடினாலும் பாடலாம்.
ஆக மே மாதத்திலிருந்து அனாதை ஆக போகின்றார்கள், பாவம்
*********
“இவுகள தூக்கி போட்டாலும் அரசியலுக்கு போகாம ஓடி வந்து ஒளிஞ்சுக்கிறதுலும் அர்த்தம் இருக்கு
ஒருவேளை இவர் போயிருந்தா பிரேமலதா மாதிரிதான நாமளும் வாங்கிகட்டணும், நம்ம மானத்த காப்பத்தத்தான் இப்படி எல்லாம் மாமா பண்ணிருக்கு
என்ன மன்னிச்சிருங்க மாமோய்…
எத்தனை ஜென்மத்துக்கும் நீங்கதான் மாமா, ஆனா அத்தனை ஜென்மத்திலியும் நீங்க நடிச்சு பணமா கொட்டிட்டே இருக்கணும் மாமா”

*********
7 தமிழர் விடுதலைக்காக நாளை மனித சங்கிலிப் போராட்டம்: பாமக கை கோக்கும்; ராமதாஸ்
அப்படியே ஒரு சங்கிலி எடுத்து இவரின் கையினை கட்டி அந்த ஏழுபேரோடு உள்ளே தள்ளுவது நாட்டுக்கு நலம்
*********
ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் மீண்டும் இணைந்துவிட்டது
ஆம் Senthil Vasan M சங்கத்திற்கு மறுபடியும் வந்துவிட்டார்
வந்ததும் என்ன செய்கின்றார் தெரியுமா?
உடல் நிறைய ஆர்.டி.எக்ஸ் குண்டுகளை கட்டிகொண்டு தயாராக இருக்கின்றார்
ராகுல்காந்தி இன்னும் குஷ்புவின் தொகுதியினை அறிவிக்கா நிலையில் சத்தியமூர்த்திபவனுக்கான ஆபத்து நீடித்து கொண்டே இருக்கின்றது
இது முதல் எச்சரிக்கை….
*********
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை கோவை சரளா
மகான் கவுண்டமணியினை அவர் சீடர் செந்திலோடு இழுத்து சென்றால் நன்றாக இருந்திருக்கும்
ஆக நாட்டை மீட்கும் பெரும் போராட்டத்தில் கோவை சரளாவினை மீட்டிருக்கின்றார்க கமலஹாசன்..
**********
காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது என்பது, ’கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்தது’ போன்றது- அமைச்சர் ஜெயகுமார்
மீன்வளதுறை அமைச்சர் அல்லவா? அதனால் புத்தி கருவாடு, மீன், கடல் என்றுதான் செல்லும்
எனினும் பாஜக ஆட்சி எனும் நீர் இருக்கும்வரைதான் இந்த ஜெயகுமார் எனும் மீன் எல்லாம் துள்ள முடியும் என்பதுதான் அன்னாருக்கு தெரியவில்லை
பாஜக் ஆட்சி இல்லையென்றால் இவரும் கருவாடுதான்
ஆனாலும் இந்த பழமொழியினை முக ஸ்டாலின் திருப்பி சொல்லமுடியுமா? என ரகசியமாக அமைச்சர் குத்தியிருப்பதுதான் ஹைலைட்
எங்கே முக ஸ்டாலின் இதை திரும்ப சொல்லட்டும் பார்க்கலாம் என அமைச்சர் சொல்லாமலிருப்பதுதான் பெரிய விஷயம்