தேர்தல் துளிகள் 12/04/2019(1)

ஆக’ ன்னு சொல்லாம அடுத்த வார்த்தை ஸ்டாலினை பேச சொல்லுங்க பார்ப்போம் : சீமான்

ராசா, அவர் உளறினாலும் உண்மையினை உளறுகின்றார்

நீர் கத்தி கத்தி பேசினாலும் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை

அவர் ஆக என பேசுவது இருக்கட்டும், நீர் ஒரு உண்மையினை பேசிவிடும் பார்க்கலாம்

என்னதான் தமிழகத்தில் தாமரை மலராது கருகும் என திமுகவினர் சொல்லிகொண்டே இருந்தாலும், கலைஞர் வீட்டில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது

ஆம் முக ஸ்டாலின் மகளின் பெயர் “செந்தாமரை”

அக்கா தமிழிசை இதை எப்படி மறந்தார்?

தூத்துகுடி கருவாட்டு சந்தையில் நெத்திலி கருவாடு விற்றுகொண்டிருக்கும் அக்கா தமிழிசைக்கு தகவல் சொல்லியாயிற்று

திமுக பேனரில் பெரியார் இடத்தை பிடித்துகொண்ட கண்ணன் உண்மையிலே கெட்டிக்காரன்

இனி பெரியார் சிலைகளை இடித்துவிட்டு கண்ணன் சிலையினை திமுகவினரே வைத்துவிடுவார்கள் போல..

அப்பொழுது ஸ்டாலின் பெயர் பரந்தாமன் எனவும் அவர் மகனின் பெயர் உதய கிருஷ்ணா எனவும் மாற்றம் பெறும்

ஆம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே அல்ல, கிருஷ்ணனை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்

அதனால்தான் “கோபால”புரத்தில் குடியேறினார் கலைஞர், அதுவும் வேணுகோபாலசாமி கோவில் அருகிலே குடியேறினார்

இனியாவது நம்பி தொலையுங்கள்

“சுவாமி நான் பாவியாய் இருக்கின்றேன் என் பாவங்களுக்காக மன்றாடும்

மகனே நீ பாவியாய் மட்டுமல்ல காவியாகவும் இருக்கின்றாய்

சுவாமி என் பாவங்களுக்காகவும் தேர்தலில் நான் வெற்றி பெறவும் ஜெபம் செய்யுங்கள்

கர்த்தரே ஏப்ரல் 18 வரை கிறிஸ்தவனாய் இருக்கும் இவரைமன்னிப்பீராக, அப்படியே வேறுவழியின்றி பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் இவர்கள் அனுமதியின்றி நடத்தமுடியா காரணத்தால் இவர்கள் பின்னால் செல்லும் எங்களையும் மன்னியுங்கள் தேவனே…”

“தம்பி சித்திரை 1 வருது, “தமிழ்புத்தாண்டு வாழ்த்து” என சொல்லி சிக்கி கொள்ளாமல் இரும், நமக்கு தை 1 தான் புத்தாண்டு. இதை நீர் சொல்கின்றீரா? நான் சொல்லட்டுமா?

ஒரு புல்லும் புடுங்க வேண்டாம், தேர்தல் முடியும் வரை வெளிநாடு போய் தொலையும் , என் மனைவி கண்ணில் பட்டீரென்றால் தொலைத்துவிடுவார் ஜாக்கிரதை”