தேர்தல் துளிகள் 27/03/2019 (1)

ராசாத்தி அம்மாள் நிச்சயம் முருகனிடம் வேண்டியிருக்க மாட்டார், ஆனால் வள்ளியிடம் வேண்டியிருப்பார்

ராசாத்தி அம்மாளின் கஷ்டம் அந்த வள்ளி ஒருத்திக்குத்தான் முழுமையாக புரியும் என்பதால் வேண்டுதல் நிச்சயம் ஏற்கபட்டிருக்கும்

முத்துவேலர் சொத்தே..
முத்தமிழர் வித்தே..
முத்துநகர் முத்தே…

(இதுபோன்ற ஏக அடைமொழிகள் சங்கத்து கைவசம் உள்ளது, வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்)

தமிழ்நாட்டின் மிகபெரும் சாபக்கேடு அதிமுக அதுவும் அதன் அடுத்த வெர்ஷனான தினகரன் கோஷ்டியும் இத்தேர்தலோடு காணாமல் போக வேண்டும்

(அதிமுக இல்லா இடத்தில் அதனையொற்றி களமிறங்க நினைக்கும் பாஜக தானாக வெளியேறும்..)

40 ஆண்டுகாலம் தமிழகத்தை பிடித்த சனி இந்த அதிமுக..

அது ஒழிவதன்றி தமிழகத்திற்கு விடிவே இல்லை

“அங்க பாருங்க ராகுல், தமிழ்நாட்டுல மச்சான் அரசியல் கொடிகட்டி பறக்குது , இந்த tttv தினகரன், சுதீஷ்ல இருந்து சைமன் மச்சினன் வரைக்கும் நிறைய மச்சான் அரசியல்..

அதெல்லாம் பார்க்காதீங்க வாத்ரா,அப்புறம் உங்க புத்தியும் மாறி தொலையும்., எனக்கே அதை எல்லாம் பார்த்துட்டு உங்கள பார்க்க பயமாகத்தான் இருக்கு..”

எங்களை நம்பி அதிகாரத்தை தாருங்கள்; சிறந்த ஆட்சியை தருவோம்: சீமான்

அங்கிள் சைமனுக்கு என்னாயிற்று என தெரியவில்லை, நடப்பது நாடாளுமன்ற தேர்தல்

அன்னாருக்கு 40 தொகுதி கிடைத்தாலும் அதிகாரம் வராது, இந்தியா முழுக்க அன்னார் வெல்லவும் முடியாது

இன்னொரு கட்சி ஆதரவு தந்தால் அன்னார் ஏற்கமாட்டார், மானம் அவருக்கு முக்கியம்

இதில் இவர் எப்படி இந்திய ஆட்சியினை பிடிப்பார் அதில் சிறந்த ஆட்சி தருவார்?

அவருக்கும் அவர் மச்சினருக்குமே வெளிச்சம்..