தேர்தல் துளி – 05/03/2019(1)
மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
ஆக திமுக அணிக்கு அந்த ஒரு தொகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் வீழ்ந்த விமான கதைதான்
வெற்றிகணக்கில் இப்பொழுதே ஒரு தொகுதியினை திமுக மறந்தே ஆகவேண்டும்
********
“பங்கு, அவங்க எல்லாம் சேர்ந்து நமக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கிருக்காங்க?
சரியா தெரியல, விஜயகாந்த் வாசன் கோஷ்டின்னு கொஞ்சம் பங்கு வைப்பாங்களாம், ஆக அவங்களுக்கு போக நமக்கு 10 தொகுதி வரும் போல பங்கு,
அடேயப்பா அவ்வளவு தருவாங்களா?
பின்ன விட்ருவோமா?
சரி அடுத்த விருந்து விஜயகாந்த் வீட்லதான, எப்போ கிளம்பணும்”
**********
திமுகவினர் இனி வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டும் அப்படியே அவர்கள்மேல் விழும் கல்லையும் கட்டையினையும் தாங்கியாக வேண்டும்
அங்கிள் சைமன் திமுகவினரை பழிவாங்க மிகசிறந்த வழி அவர்களோடு கூட்டணி வைப்பது
அப்படி நடந்தால் சைமனுக்கு முழு பாதுகாப்பினை அவர்களே வழங்குவார்கள், அவரை முழு திராவிட இன உணர்வு சிங்கமாக ஏற்றும் கொள்வார்கள்
***********
“எப்பா மொத்தமே தமிழ்நாட்டுல 39 தொகுதிதாம்ப்பா வருது, இவனுக கேக்குறது கூட்டிபார்த்தால் 50 தாண்டி போகுதுப்பா
அதுவும் இந்த கேப்டன் தமிழ்நாட்டு தொகுதி மொத்தமும் எனக்கு பாண்டிச்சேரி தொகுதி உங்களுக்குன்னு சொல்லும்பொழுது ரொம்ப கடுப்பாகுதுப்பா”
************
இன்னும் 48 மணிநேரத்தில் தலைவி குஷ்புவிற்கான தொகுதி எது என அறிவிக்காவிட்டால் சென்னை சத்யமூர்த்தி பவன் அதி தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என சர்வதேச உளவுதுறை எச்சரிக்கின்றது