தேர்தல் துளி – 22 பெப்ரவரி 2019

நலமே

“ஏ புள்ள வாசல்ல நிக்குற 3 பேரும் யார்?

வந்திருப்பது 2 பேர்தான் நீங்க பார்க்கிறது கலைஞரோட ஆவியா இருக்கும்.

இருக்கும் புள்ள, சரி இந்த 2 பேரும் யாரு?

முதல்ல நிக்குறது பழனிச்சாமி, பின்னால நிக்குறது மோடி

எதுக்கு வந்திருப்பாங்க?

வழக்கம் போல நலம் விசாரிக்க வந்திருப்பாங்க, துளியும் அரசியல் இருக்காது

15 தொகுதி கொடுத்தா கேப்டன் நலம்னு வாசல்ல போர்டு வச்சிருவோமா புள்ள, ஒரே டிஸ்டர்பென்ஸா இருக்கு”

நலம் விசாரிக்கும் ஸ்டாலின்

திருநாவுக்கரசர், ரஜினியினை தொடர்ந்து விஜயகாந்தினை சந்திக்கின்றார் முக ஸ்டாலின்

இதென்ன? அந்த ஆளை எல்லோரும் ஓடி ஓடி பார்த்துட்ட்டு?, சரியில்லையே, நம்மள காலி பண்ணிருவாங்களோ?

திமுக தமிழருக்கு செய்த துரோகம் என்னென்ன? என எழுதி ஒரு பைல் போட்டு வச்சிருந்தேன், இனி அதை தேடனும்

நலம் விசாரிக்கும் ரஜினிகாந்த

“அர்ரே தமிழிசை, ரஜினிகாந்த விஜயகாந்த் வீட்டுக்கு அனுப்புனது மோடின்னு சிலபேர் கிளம்பிருக்காங்க‌

எனக்கே அவர்கிட்ட பேசி கிறுக்கு பிடிச்சி போச்சி

அவர புரிஞ்சிக்க யாராலயும் முடியல, எனக்கு பெப்பெ காட்டிட்டு அங்க அழகிரிக்கு ஹாய் சொல்லிட்டு இப்போ திடீர்னு விஜயகாந்த பார்க்க போயிருக்காரு

அஸ்ட்ராய்டு கல்லை கணிக்கும் 
அமெரிக்க சயின்டிஸ்டே இவர் போக்கு தெரியாம மண்டைய பிய்ச்சிட்டு இருக்காங்கோ

பிளீஸ் தமிழிசை மாத்தா ஜி, ரஜினி அனுப்பினது நம்பிள் இல்லேன்னு ஊரெல்லாம் சொல்லிருங்கோ..”

அபிராமி…அபிராமி

நானும் ஒரு கட்சி வச்சிருக்கேன், என்ன வந்து பார்க்காம ரஜினி விஜயகாந்தை பார்ப்பாராம்

இதெல்லாம் என்ன நியாயம் அபிராமி…அபிராமி

அரசியலே இல்ல

அரசியல் குறித்து துளியும் பேசவில்லை; அவர் நல்ல மனிதர்: விஜயகாந்தை சந்தித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

ஆக விஜயகாந்த் என்றொரு மனிதர் இருப்பதும் அவர் நல்ல மனிதர் என்பதும் ரஜினிக்கு இப்பொழுதுதான் இருந்திருக்கின்றது

இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க என்னவெல்லாம் ரஜினிக்கு தெரியுமோ தெரியவில்லை..