தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் என்னென்ன விருதெல்லாம் வருமோ?
ரஷ்யாவில் பல விருதுகள் உண்டு சில சோவியத் காலம் சில அவர்களின் புகழ்பெற்ற அரசனான பீட்டர் காலத்தில் ஏற்படுத்தபட்டது
அப்படி பீட்டர் த கிரேட் எனும் புகழ்பெற்ற ரஷ்ய மன்னன் அந்த விருதினை அறிவித்தான்
அதன் பெயர் “ஆர்டர் ஆப் ஆன்ட்ரூ”
அதாவது அந்திரேயா அல்லது ஆன்ட்ரு எனப்படும் புனிதரை கொண்டாடிய ரஷ்ய திருச்சபையின் உருவில் கொடுக்கபட்ட விருது அது
தோமா இந்தியாவுக்கான அப்போஸ்தலர், பீட்டர் வாடிகனுக்கான அப்போஸ்தலர் என்பது போல ஆன்ட்ரு ரஷ்யாவுக்கான அப்போஸ்தலர்
ஆண்ட்ரு இயேசுவின் அப்போஸ்தலர், மிக மதிப்பானவர்
அவருக்கு சமமாக மதிக்கின்றோம் என என்றோ அந்த பீட்டர் மன்னன் உருவாக்கி வைத்தான்
மகா பீட்டர் சாதாரணம் அல்ல, ரஷ்யாவின் புகழ்பெற்ற அடையாளம் ரஷ்யாவின் முன்னோடி.
அது பீட்டர் மன்னன் காலத்தில் இருந்தது பின் சோவியத் காலத்தில் நிறுத்திவைக்கபட்டது , 1998ல் அது எல்ட்சினால் மறுபடி கொண்டுவரபட்டது
அது மிக உயர்ந்த விருதான அது மிக சில வெளிநாட்டவருக்கே அறிவிக்கபட்டிருக்கின்றது
முன்பு சீன அதிபர் ஜின்பெங் எல்லாம் வாங்கினார்..
திமுக காங்கிரஸ் அன்பர்கள் நல்ல மருத்துவரை அருகில் வைத்து கொள்ளாமல் இப்பதிவை படிக்க வேண்டாம்
காரணம் நீங்கள் மறுபடியும் ரத்த கொதிப்பில் எகிறும் சம்பவம் ஒன்று நடந்துவிட்டது
ஆம் அந்த விருது இன்று மோடிக்கு அறிவிக்கபட்டிருக்கின்றது
உலக அரசியலில் தவிர்க்க முடியாத நபராகவும் ரஷ்ய இந்திய உறவுக்கு பாடுபட்டதற்காகவும் தெற்காசிய அமைதிக்கு பாடுபடும் தலைவராகவும் மோடி விளங்குவதால் இந்த விருதாம்
தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் என்னென்ன விருதெல்லாம் வருமோ தெரியாது
ஒரு கதை உண்டு
இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்த்த பஞ்சாப் மன்னருக்கு தன் மகன் யுவராஜை கிரிக்கெட் வீரனாக வளர்க்க ஆசை அவனோ ரவீந்திர ஜடேஜா போல ஆகிவிட்டான்
அதனால் என்ன? பவுலர்களை செட் செய்துவிட்டு மகனை களத்தில் இறக்கினார்.
வரலாற்றில் முதல் மேட்ச் பிக்ஸிங் அதுதான்
மைதானத்தில் அவன் சிக்சராக அடித்து தூக்கினான், எல்லா பந்தும் சிக்ஸர் என்றால் எப்படி?
மைதானம் ஒருமாதிரி நமுட்டு சிர்ப்பு சிரிக்க மகராஜா எழுந்தார்
“மகனே யுவராஜா இனி சிக்ஸர் அடிக்காதே, தயவு செய்து அடிக்காதே” என கத்தினார்
அப்படி மோடியும் இனி விருது வேண்டாம் என உலக நாடுகளை பார்த்து கத்த போகின்றாரோ என்னமோ?
