தேர்தல் நேரத்தில் சிக்கி இருக்கும் கண்டெய்னர் …

பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுரங்களை தகர்த்த பின், அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் எப்படி இருக்கலாம் என சிஐஏ மற்றும் எப்பிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் யாரிடம் விசாரித்தன தெரியுமா?

ஹாலிவுட் டைரக்கடர்களிடம். ஆம், அவர்களின் கற்பனா சக்தியில் சில சாத்தியங்கள் உண்டு, அப்படியும் நடக்கலாம் என எல்லா ஹாலிவுட் படங்களையும் பார்த்துவிட்டு, பின் அவர்களிடம் விவாதித்தும் விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தினார்கள்

அதன்பின் இன்றுவரை அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கின்றது

தமிழகம் இதுவரை சினிமாவில் இருந்து முதல்வர்களை எடுத்ததே அன்றி, பாதுகாப்பு விஷயங்களை எல்லாம் எடுத்துகொள்ளவில்லை

ஆனால் பாருங்கள், சினிமா டைரக்டர்கள்தான் இப்படி எல்லாம் நடக்கலாம் என அன்றே எச்சரித்திருக்கின்றார்கள்

கோடிகணக்கான பணத்தினை கண்டெய்னரில் கடத்தலாம் என முதன் முதலில் திருடா திருடா படத்தில் சொல்லிகொடுத்தவர் நமது மணிரத்னம்

Image may contain: 1 person, glasses, sunglasses and close-up

இன்று திருப்பூரில் 570 கோடி கண்டெய்னர், சிறுதாவூர் கண்டெய்னர் என அது பிடிபட்டுகொண்டே இருக்கின்றது

துறைமுக கண்டெய்னர்கள் மீது எப்பொழுதும் கண் வைத்திருக்கவேண்டும் என சொன்னவர் டைரக்டர் ஹரி, சிங்கம் 3 வரை அதனைத்தான் சொன்னார்

இன்று சென்னை துறைமுகம் அல்லோலபட்டு கொண்டிருக்கின்றது, கண்டெய்னர் நிறைய பணம் வந்திருக்கின்றதாம், ஒரு கும்பல் அது ஆர்.கே நகருக்கான பணம் என்கின்றது

நாட்டுபற்று கோஷ்டி அதெல்லாம் கள்ளநோட்டு, மோடி பிடித்துவிட்டார் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றது

தேர்தல் நேரம், இப்படி ஒரு கண்டெய்னர் சிக்கியிருப்பது எங்கோ ஒரு விதை இரட்டை இலை விட கொண்டுவரப்பட்டிருக்கும் பணம், மரம் வளர்க்க கொண்டுவரபட்ட பணம் என்ற புகையும் வருகின்றது

இன்னும் எப்படி எல்லாம் கடத்தபோகின்றார்களோ தெரியாது

தேர்தல் கமிஷன் உடனடியாக ஆலோசிக்க வேண்டிய நபர் மணிரத்னம் முதலான டைரக்டர்கள்

எப்படி எல்லாம் பணம் கடத்தபடலாம் எனும் அனைத்து சாத்தியங்களும் அவர்களாலே ஊகிக்கபடுகின்றது

அது உண்மையாகவும் நடக்கும்பொழுது, அதனை முன் கூட்டியே தடுக்க காவல்துறை அவர்களை கலந்தாலோசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஆக இனி ஸ்டோரி டிஸ்கஷன்களில் காவல்துறை நபரும் டீ பாய், அசிஸ்டெண்ட் டைரக்டர் , உதவி கதாசிரியர் எனும் வேடத்தில் ஊடுருவது தமிழகத்திற்கு நல்லது

ஆனானபட்ட சிஐஏ அதனை செய்யும்பொழுது தமிழகத்து யார்டு போலிஸ் செய்ய கூடாதா?

இந்த கண்டெய்னர் சிக்கும்பொழுதெல்லாம் மணிரத்னம் தான் நினைவுக்கு வருகின்றார்

மனிதர் எப்படி எல்லாம் யோசிக்கின்றார்?

இன்னும் என்னென்ன சாத்தியங்களை எல்லாம் மனிதர் யோசித்து வைத்திருக்கின்றாரோ தெரியாது

மனிதர் வாயினை திறக்கவும் மாட்டார், கோடி கொடுத்தாலும் 4 வார்த்தைதான் பேசுவார்

எப்படியோ போலிஸ் பட்ஜெட்டில் ரகசிய நிதியினை சினிமா டைரக்கடர்களுக்கும் ஒதுக்க வேண்டிய நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது

அப்படி ஒதுக்கினால் பெரும் தொகை முதலில் மணிரத்தினத்திற்குத்தான், ஹரி எல்லாம் இரண்டாம் பட்சம்

அப்படி கொடுத்தாலும் மணிரத்னம் வாய்திறந்து எவ்வளவு தொகை என சொல்லவா போகின்றார்? அவர் அப்படித்தான்..ரகசியம் 100% கன்பார்ம்….