தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது
தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது.
அப்படி அந்த தேவர் என்ன செய்தார்? நாட்டிற்கு போராடிய ஆயிரகணக்கானவர்களில் அவரும் ஒருவர்.
அதை தாண்டி கொண்டாடபட காரணம் என்ன?
குற்றபரம்பரை சட்டத்தை முதலில் எதிர்த்தவர் ஒரு நாயர், அவரை தொடர்ந்து ஏராளமானோர் எதிர்த்தனர் , அவர்களில் ஒருவர்தான் தேவர்
மதுரை கோவிலில் தலித்துகளை அனுமதிக்க போராடியது யார்?
காந்திய வழியில் நம்பிக்கையுள்ள ஒரு ஐயர்தான் அதற்கு போராடினார், பின்னாளில் வந்தவர்தான் தேவர்
பின் எதற்கு இவ்வளவு அழிச்சாட்டியம்?
தன் சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுத்தார், ஆனால் அச்சொத்தில் அறங்காவலர் யார் என்றால் எல்லாம் அவருக்கு நெருக்கமானவர்கள்
என்னதான் செய்தார் தேவர்?
அப்பகுதியில் கல்விசாலைகளை திறக்க அன்றைய அரசு முயற்சித்தபொழுது அவர் ஒத்துழைக்கவில்லை. பின் சாலைகள் அமைக்கும்பொழுதும் இதன் மூலம் போலிஸ் வந்துவிடும் என அவர் சர்ச்சை கிளப்பிய செய்திகளும் இருந்தன
நேதாஜி தொடர்பாக அவர் அள்ளிவிட்ட கதைகள் கொஞ்சமல்ல
உச்சமாக அணுகுண்டை மடியில் கட்டி வைத்திருப்பதாக அவர் சொன்ன காமெடியும். ஐஸ் நோஸ் எனும் கடலை உறைய வைக்கும் ஆயுதம் தன்னிடம் இருப்பதாகவும் சொன்னதெல்லாம் அழிச்சாட்டியம்
வடக்கன் குளத்து பிள்ளைமார்களுக்கு ஆதரவாக ராமநாதபுரம் மறவர் சேனை வரும் என்று அறிவித்ததெல்லாம் தென்னகத்தை கலவரகாடாக்கும் அறிவிப்புகள்
தேவர் எதுவும் உருப்படியாக செய்தவர் அல்ல, செட்டியார்களை போல பெரும் கல்லூரிகள் அமைத்தவரும் அல்ல, ஜிடி நாயுடு போல தொழிற்சாலை கண்டவரும் அல்ல
இன்றும் அந்த பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியே
பிற்கால சந்ததிக்கு ஒருவழியும் காட்டாமல், உருப்படியான ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் வெறும் சாதிபெருமை பேசியவருக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என்றால், அதுதான் தமிழக அரசியலில் சாதி பிடித்திருக்கும் இடம்
இது வரவேற்க கூடிய விஷயமே அல்ல, எத்தனையோ அறிஞர்களும், கல்விமான்களும் வாழ்ந்த தமிழகத்தில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு சாதிக்காக விழா நடத்தி பெரும் தவறான முன்னுராதணம் நடந்துகொண்டிருக்கின்றது