தைவான் மக்களுக்காக பிரார்த்திப்போம்

சீனா குதற நினைக்கும் தைவானை நிலநடுக்கம் தூக்கி போட்டு அடித்திருக்கின்றது

முதல் செய்தியில் 4 பேர் பலி என கணக்கு தொடங்குகின்றது, கட்டங்கள் சரிந்தும் தொங்கிகொண்டும் , தமிழக அரசு போலவும் நிற்பதை கண்டால் மாபெரும் அச்சம் மேலோங்குகின்றது.

மிக கவனமாகவும், அழகாகவும், பிரமாண்டமாகவும் கட்டபட்ட கட்டங்கள் எல்லாவற்றையும் நொடியில் சரித்து தள்ளிவிட்டது பூமி

எனினும் தலைநகர் தைபேயில் உள்ள உலகின் மிக உயர கட்டிடத்திற்கு ஆபத்தில்லை, அங்கு நிலம் அதிரவில்லை

உலக நாடுகள் உதவிபொருட்களோடு விரைகின்றன, தைவான் மக்களுக்காக பிரார்த்திப்போம்

நிலநடுக்கத்தை தொடர்ந்து வரும் பின் அதிர்வுகள் இன்னும் வந்துகொண்டே இருப்பதுதான் அஞ்ச வைக்கின்றது