தொடரட்டும் இந்த பொதுநலபணி. வள்ளியூர் பெருமை சிறக்கட்டும்
கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்திருக்கும் நேரம் உலகெல்லாம் இருந்து உதவிக்கரம் நீள்கின்றது
தமிழக மக்களும் அன்டை மாநிலம் எனும் நேயத்தில் அள்ளி கொடுக்கின்றனர்
நமது வள்ளியூர் மக்களும் உதவிபொருட்களை திரட்டி அனுப்பிகொண்டிருக்கின்றார்கள் என்பது நன்றிக்கும் வாழ்த்துகும் உரிய பெரும் விஷயம்
கட்சி, மதம், மொழி, அரசியல், இனம் தாண்டி மானிட நேயத்தில் வள்ளியூர் மக்களும் அள்ளி கொடுத்துகொண்டிருப்பது பாராட்டுகுரியது
உணவு, உடை, மருந்து , அத்தியாவசிய பொருட்களாக அள்ளி கொடுக்கின்றார்கள்
சிறு துளிதான் வெள்ளமாக மாறும்
அப்படி சிறு மழைதுளி பெரு வெள்ளமாக கேரளாவினை மூழ்கடித்திருக்கும்பொழுது நம் ஒவ்வொருவரின் சிறு உதவியும் பெரும் உதவியாக பெரும் வெள்ளமாக அவர்களுக்கு உதவ போகின்றது
இதற்கு முன்னணியில் நின்று உழைப்போர், பொருள் திரட்டுவோர் என அனைவருக்கும் நன்றி
தொடரட்டும் இந்த பொதுநலபணி. வள்ளியூர் பெருமை சிறக்கட்டும்
இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாதபடி கேரள வெள்ளத்திற்கு அரபு நாடுகள் பல முன்வந்து உதவுகின்றன
மலையாளிகள் அரபுநாடுகளில் எப்படி இடம் பிடித்திருக்கின்றனர் என்பதற்கு இதை தவிர எடுத்துகாட்டு சொல்லமுடியாது