தொப்பி தொப்பியான பொய்கள்..

காவேரி பிரச்சினைக்கு திமுகதான் காரணம் , அதனால்தான் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனர்: எடப்பாடி பழனிச்சாமி

அவர்கள் வீட்டில் மூட்டைபூச்சி கடித்தாலும் திமுகதான் காரணம் என கத்தும் அளவிற்கு நிலமை சென்றாயிற்று

உண்மை என்ன?

1975 வரை காவேரியில் சிக்கல் பெரிதாக இல்லை, அதன் பின் கிட்டதட்ட 20 வருடங்கள் திமுக ஆட்சியிலே இல்லை

கன்ன்டம் அணைகளை கட்டி தள்ளும்பொழுது இங்கு ஆட்சியில் இருந்தது யார்? அந்த தொப்பி தலையர் ராமசந்திரன்

கன்னடன் அணைகட்டும் பொழுது இங்கு ராமசந்திரன் போட்டோவிற்கு வித விதமாக போஸ் கொடுத்துகொண்டிருந்தார், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்காக மேல்சபையினை கலைத்துகொண்டிருந்தர்

சராஜா தேவியா? ஜெயலலிதாவா? யாரை எம்பியாக்கலாம் என யோசித்துகொண்டிருந்தார்,

காவேரியில் மட்டுமா தடைபட்டது?

முல்லைபெரியாரில் 136 அடிக்கு மேல் உயர்த்தமாட்டோம் என சம்மதித்து அதனை கெடுத்ததும் சாட்சாத் அந்த அதிமுக ராமசந்திரனே

இப்பொழுது வந்து பழனிச்சாமி குதித்துகொண்டிருக்கின்றார்

6 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்வது அதிமுக, ஆனால் எல்லா சமீபத்திய பிரச்சினைகளுக்கும் காரணம் திமுகவாம்

எப்படி இருக்கின்றது இவர்களின் தொப்பி தொப்பியான பொய்கள்..