தொல்காப்பியன்

தொல்காப்பியன் என்பவர் காந்தியோடு தென்னாப்ரிக்க சிறையில் இருந்தவர் என்பதும் பின்பு சுதந்திர போராட்டத்தில் காமராஜரோடு 11 வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் இவ்வளவு நாளும் தெரியாமலே மறைக்கபட்டிருக்கின்றது.

கக்கன் போலவே காமராஜருக்கு வலது கரத்தின் வலதுகரமாக அவர் உழைத்ததும் மறைக்கபட்டிருகின்றது

இம்மானுவேல் சேகரன் கொலையும் முதுகுளத்தூர் கலவரமும் காமராஜருக்கு சிக்கலை ஏற்படுத்திய காலங்களில் , இந்த தொல்காப்பியனே தனி மனிதனாக சென்று எல்லா கலவரங்களையும் அடக்கியிருக்கின்றார்

அந்த மாமனிதனின் புகழ் அவர் ஒரு தலித் என்பதால் மறைக்கபட்டிருக்கின்றது, வரலாற்றில் இருந்து அகற்றபட்டிருக்கின்றது

இப்பொழுது மோடியின் செங்கோல் ஆட்சியில் எடப்பாடியின் வன் கோல் ஆட்சியில் அந்த மாபெரும் தியாகியின் புகழ் வெளிவருகின்றது.

காந்தியின் சீடரான காமராஜர் அவர் பிறந்தநாளில் இறந்தது போல, காமராஜரின் ஒப்பற்ற சீடரான தொல்காப்பியன் அவர் பிறந்தநாளிலே இறந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல…

காமராஜருக்கு சரிநிகரான தியாகியினை இவ்வளவு நாள் மறாந்த தமிழகம் எப்படி உருப்படும்? எப்படி மழை பெய்யும்?

வின்ஸ்டன் சர்ச்சிலையும், மவுண்பேட்டனையுமே அலறவிட்ட தியாகி தொல்காப்பியன் வாழ்க…

(மற்ற கட்சி எல்லாம் மகன் பேரனை தலைவராக்கினால், இந்த கட்சி மட்டும் ரிவர்ஸில் சென்று தகப்பன் தாத்தாவினை எல்லாம் தியாகி ஆக்கிவிடும் போல..)