தோண்ட தோண்ட விவகாரம் ஆவது ஜெயா மகள் விஷயம்தான்

தோண்ட தோண்ட விவகாரம் ஆவது ஜெயா மகள் விஷயம்தான்

இப்பொழுது ஜெயா அண்ணன் வாய் திறந்திருக்கின்றான், மனிதர் 80 வயதை கடந்திருக்கின்றார், எங்கள் குடும்பத்தில் யாரும் 60 வயதினை கடக்கவில்லை என்பது ஜெயா சொன்ன கடைசி பொய்யாக இருக்கின்றது

ஆம் ஜெயாவின் அப்பாவின் முதல் மனைவி மகன் வாசுதேவன் அவர்தான் விவகாரத்தை கிளப்புகின்றார்.

((இதில் கிளைகதையும் வருகின்றது, சந்தியாவிற்கு சைலஜா என்று இன்னொரு மகளும் இருந்திருக்கின்றாராம்

அதாவது உண்மையான உடன்பிறவா சகோதரியும் இருந்திருக்கின்றார்)

அவர் என்ன சொல்கின்றார் என்றால், ஜெயாவிற்கு மகள் உண்டு ஆனால் அது அம்ருதாவாக இருக்க முடியாது என்கின்றார்

அதனை விட அவர் அடுத்து சொன்னதுதான் ஆச்சரியம்

ஜெயாவிற்கு ஹைதரபாத் திராட்சை தோட்டத்தில்தான் ஒரு மகள் பிறந்தாள், அவளை படிக்க வைத்து அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டார்கள்

ஹைதரபாத் திராட்சை தோட்டம் என்றவுடன் முன்பு ஜெயா விவசாயம் பார்த்து கோடிகணக்கில் சம்பாதித்ததாக கோர்ட்டில் சொன்ன காட்சிகள், பின் விவேக் அம்மா இளவரசியும் அவர் கணவரும் அங்கு வேலை செய்து விவேக் அப்பா அங்கே இறந்தபின்பு இளவரசி போயஸ் கார்டனுக்கு வந்ததெல்லாம் உங்கள் நினைவுக்கு வர கூடாது

ஜெயாவின் மிகபெரும் மர்ம மாளிகை அந்த ஐதரபாத் திராட்சை தோட்டமே

அங்குதான் அவருக்கு பிரசவம் நடந்தது என்கின்றார் ஜெயாவின் அண்ணன்

இப்படி சொல்லிவிட்டு அவர் அடுத்து சொல்வதுதான் நம்மை துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு நன்றி சாமி என சொல்லிவிட்டு கிளம்ப சொல்கின்றது

இந்த உண்மைகள் எல்லாம் வெளி தெரிய வேண்டுமாம், அதற்கு இந்த உண்மைகளை முழுக்க அறிந்த சசிகலாவும் நடராஜனும் வாய் திறக்க வேண்டுமாம்

அவர்களா திறப்பார்கள்?

கவனித்துபாருங்கள், இது யாரோ யாருக்கோ குறிவைத்து செலுத்தபடும் எச்சரிக்கை அம்புகள்

யாரையோ மிரட்டி திரைமறைவு பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார்கள்

அதனால் யாருக்கு அனுகூலம் என்பது திரைக்கு பின் நடக்கும் சில பேச்சுவார்த்தைகளில் தெரியலாம், ஆனால் அந்த உண்மை ஒரு காலமும் வராது