தோனி நீ இந்திய அணியினை கரைசேர்த்த தோணி
இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதாவதுதான் ஜாம்பவான்கள் தோன்றுவார்கள், அவர்களால் முடியமட்டும் விளையாடி அவர்களே விரும்பும்பொழுது ஓய்வு கொடுப்பதுதான் சரி
ஆனால் இங்கு அப்படியல்ல எந்த சாதனையாளன் சிறிது சறுக்கினானாலும் பொங்கிவிடுவார்கள், உடனே வெளியே போ என கத்துவார்கள்
கவாஸ்கருக்கு மட்டுமே இங்கு அந்த வாய்ப்பு வந்தது
ஸ்ரீகாந்த் என்ற , சச்சினுக்கு முன்னோடியான அவருக்கும் இதே சிக்கல்கள் லேசாக கிளம்பின
கபில்தேவ் எனும் இந்திய கிரிக்கெட்டுக்கே புத்துயிர் பாய்ச்சிய, இந்திய கிரிக்கெட்டின் பெரும் அடையாளமான கபில் கடைசி காலங்களில் இச்சிக்கலை எதிர்கொண்டாலும் ஹாட்லியின் சாதனையினை தகர்த்துவிட்டே விடைபெற்றார்
அசாரூதின் ஒரு அசாத்திய வீரர், ஆனால் அவருக்கு துணை ஆட்டக்காரர்கள் சரியில்லை. சச்சின் அப்பொழுது எல்லாம் பெரும் பார்ம் என சொல்லமுடியாது. எப்படியும் அணிக்கு கோப்பை வாங்கி தருவார் என எதிர்பார்க்கபட்ட அசார் சூதாட்ட புகாரில் சிக்க வைக்கபட்டார். அதற்கு முன்பே அவர் வெளியேறவேண்டும் என்ற குரல் எழும்பியது
பின் சச்சின் காலம் வந்தது, பிராட்மேனுக்கு பின் உலகம் கொண்டாடும் ஒப்பற்ற வீரர். அவரும் கொஞ்சம் சுணங்கியதும் ஓய்வுபெற்றால் என்ன என குரல் எழுப்பினார்கள்
அவரோ எதையும் காதில் வாங்காமல் ஆடி உலகக்ப்ப்பையும் வென்று, என்னால் 2 சதம் ஒருநாள் போட்டியில் அடிக்க முடியும் என காட்டிவிட்டுத்தான் வெளியேரினார்
நிச்சயம் சச்சினுக்கு அந்த அழுத்தம் வராமல் இருந்திருந்தால் அவரால் 50 வயதுவரை கூட அட்டகாசமாக ஆடியிருக்க முடியும், கிரிக்கெட் அவரின் சுவாசம்
அந்த அற்புத ஆட்டக்காரனை பின்னாளில் கரித்துகொட்டியே விரட்டினார்கள்
இப்பொழுது டோனி முறை
2004களில் சரிந்து கிடந்த இந்திய அணியினை டோனி தூக்கி நிறுத்தினார், அவருக்கு யுவராஜ் சிங், சேவக் என நல்ல ஆட்டக்காரர்கள் கிடைக்க இந்திய அணி வெற்றியினை குவிக்க தொடங்கி உலக கோப்பையினையும் வென்றது
சச்சினுக்கு பின் சேவக், யுவராஜ் சிங் என்ற வரிசையில் யுவராஜ் நோயில் சிக்கவும், சேவக் அதிரடி மட்டுமே ஆடுவேன் என அடித்து வெளியேறியதும் ஆனால் டோனி எச்சூழலிலும் அசராது நின்று பல ஆட்டங்களை காத்ததும் வரலாறு
இன்று அவரையும் ஓய்வு பெற்றால் என்ன என கேட்க ஆரம்பித்தாயிற்று
கபில்தேவ் இதனை வன்மையாக கண்டிக்கின்றார், சச்சினுக்கு நேர்ந்தது டோனிக்கும் நேர்ந்துவிட கூடாது என்பது அவர் விருப்பம்
நம் விருப்பமும் அதுதான். டோனி அபாரமான ஆட்டக்காரர். எச்சூழலிலும் அவரால் ஆடமுடியும். ஆனால் எல்லா ஆட்டத்திலும் அவரே ஆடவேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல
டோனி தொரட்டும், அவராக ஓய்வுபெறும் வரை ஆடட்டும். டோணி வெளியேறுவது விஷயம் அல்ல, ஆனால் இன்னொரு டோணி வர பல்லாண்டு காத்திருக்க வேண்டும் ஏன் வராமலே போகலாம்
அவருக்கு எந்த அழுத்தமும் தராமல் ஆடவிடுவதுதான் சால சிறந்தது, கலைஞர் தோனி பற்றி தனக்கே உரித்த பாணியில் சொன்னது எக்காலமும் பொருந்த கூடியது
“தோனி நீ இந்திய அணியினை கரைசேர்த்த தோணி”