நக்கீரன் பத்திரிகை தன் 30ம் ஆண்டு விழாவை கொண்டாடுகின்றது

நக்கீரன் பத்திரிகை தன் 30ம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகின்றதாம்

நிச்சயம் புலனாய்வு பத்திரிகையில் அதற்கொரு தனி இடம் உண்டு. அது தொடங்கபட்ட காலங்களில் ஆட்டோ சங்கரின் படுபயங்கர கதைகளை எல்லாம் அதுதான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது

இதனால் காவல்துறைக்கும் அதற்கும் ஏற்பட்ட மோதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது வேறு விஷயம்

நக்கீரனின் பணி பல இடங்களில் வாழ்த்துகுரியது, சில இடங்களில் ஆச்சரியமானது, ஏராளமான இடங்களில் அது தேவையும்பட்டது

குறிப்பாக சந்தண வீரப்பனின் 18 வயது படம் தவிர ஏது இல்லா நிலையில் அவன் எப்படி இருப்பான் என யாருக்கும் தெரியா நிலையில் மிக துணிந்து நக்கீரன் அவன் காட்டுக்குள் சென்று அவனை உலகிற்கு காட்டியது

அதெல்லாம் துணிவான செயல்

ஆனால் 100 போலிசாரை கொன்ற வீரப்பனை வெறும் செய்தியாக மட்டும் பார்த்து அவன் அட்டகாசத்தை ஒடுக்க ஒத்துழைக்க மறுத்தது போன்ற சில சர்ச்சைகள் உண்டு

நக்கீரன் தைரியமிக்க பத்திரிகையாக இருக்கலாம், ஆனால் அதன் ஈழப்புலி அபிமானமும், இங்குள்ள சில பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பது போன்றவை எல்லாம் ஏற்றுகொள்ள முடியா ரகம்

குறிப்பாக போலி திராவிடவாதிகளை உண்மை பிம்பம் போல் காட்டும் சில விளையாட்டுகளும் உண்டு

இவற்றை தவிர்த்து பார்த்தால் நக்கீரனின் இடம் நிச்சயம் வியப்பானது, போராட்டத்தில் மட்டுமே இன்றுவரை வாழும் பத்திரிகை அது

நிச்சயமாக சொல்லலாம் அதன் ஒவ்வொரு இதழும் பலத்த போராட்டத்திற்கு பின்பே வெளிவருகின்றன‌

ஒரு சில சர்ச்சைகள் இருந்தாலும், பல இடங்களில் மறைந்த, மறைக்கபட்ட உண்மைகளை கொண்டுவந்த, கொண்டு வந்துகொண்டிருக்கும் பத்திரிகை அது

அதற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

அதன் பணி தேசபற்றோடும், சமூக அமைதி நோக்கோடும் தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்