நடராசன் என்பவர் தமிழகத்தை பிடித்த ஒரு வியாதி
எம்.நடராஜன் என்பவர் மாபெரும் இன உணர்வாளர், தமிழ் தேசிய போராளி என்றெல்லாம் சிலர் கிளம்புகின்றார்கள். இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது
இந்தி எதிர்ப்பு போராட்டம், கலைஞரின் அபிமானம் என இருந்த நடராசன் 1985களில் ராமசந்திரனை சந்தித்தபின்பு மாறிவிட்டார்
ராமசந்திரனின் ஆளாக ஜெயலலிதாவினை கண்காணிக்கும் பொறுப்பு நடராஜனுக்கு கொடுக்கபட அங்கிருந்து ஆரம்பித்தது நடராஜனின் அரசியல் விளையாட்டு. இதில் தமிழுணர்வு, தமிழ் தேசியம் என்பதெல்லாம் சுத்தமாக இல்லை
பிரபாகரன் சென்னையில் ராமசந்திரனால் சிறைவைக்கபட்ட பொழுதோ, இல்லை ராஜிவ் பிரபாகரன் ஒப்பந்தம் நடைபெற்றபொழுதோ நடராஜன் ஒரு சத்தமுமில்லை
அமைதிபடை சென்றபொழுது கலைஞர் எதிர்த்தபொழுது, நடராஜன் ஜெயா வீட்டின் வாட்ச்மேனாக இருந்தார்
ராமசந்திரன் மறைவுக்கு பின் கலைஞரை எதிர்க்க அவர் சில விஷயங்களில் பகிரங்க ஈழ துரோகம் செய்தார் அவை எல்லாம் மறக்க முடியாது.
அமைதிபடையினை திரும்ப பெறமுடியாது என இந்தியா மல்லுகட்டிய நேரம், நடராஜனின் கூட்டாளியாக ராஜிவ் காந்தியே இருந்தார்
கலைஞர் ஆட்சியில் புலிகளுக்கு உதவியது ஒன்றும் ரகசியமல்ல, ஆனால் புலிகளுக்கு கலைஞர் உதவுகின்றார் என்ற ஆதாரங்களை டெல்லிக்கு அனுப்பியதில் நடராஜன் பங்கும் இருந்தது, ஆம் அவரின் ஒரே குறி கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட வேண்டும், ஜெயா முதல்வராக வேண்டும்
புலிகளும், தமிழ் தேசியமும் எப்படி கெட்டால் என்ன?
அந்த ஆதாரங்கள் அடிப்படையில் கலைஞர் அரசும் கலைக்கபட்டது, எந்த ராஜிவ் இலங்கைக்கு அமைதிபடை அனுப்பினாரோ, எந்த ராஜிவ் எங்கள் முதுகில் குத்தினார் என பிரபாகரன் கோபமடைந்தானோ அந்த ராஜிவோடு கூட்டணி கண்டது நடராசனின் அதிமுக
அந்த தேர்தல் பிரச்சாரம் நடந்தபொழுது காணாமல் போனார் நடராசன், வெளிநாடு சென்றார். யாரை சந்தித்தார் என்ற தகவல் எல்லாம் இல்லை
ஆனால் அப்பொழுதுதான் ராஜிவ் கொலை நடந்து ஜெயா ஆட்சிக்கும் வந்தார்
பின் ஜெயா பிரபாகரனை பிடித்து தூக்கில் போடவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியபொழுது நடராசனிடம் இருந்து சத்தமில்லை
2000ல் புலிகள் ஆனையிறவில் வென்று, சிங்களனை சுத்தமாக அடக்கி ஈழ அறிவிப்பு செய்ய முயன்று அதற்கு தமிழகத்தில் இருந்து பெரும் ஆதரவு கோரிய நிலையில் வைகோ, நடராசன் , சீமான் அப்பொழுது களத்தில் இல்லை
உண்மையில் அது புலிகளின் மாபெரும் வெற்றி, உலகமே பெரும் அச்சத்தோடு நோக்கிய நாள். அட்டகாசமாக 50 ஆயிரம் சிங்கள ராணுவத்தை சுற்றி வளைத்து பெரும் வெற்றி பெற்றனர் புலிகள்
ஆனால் சிங்கள அரசு உதவி கேட்க வாஜ்பாய் அரசு மிரட்ட புலிகள் பின் வாங்கினர். உண்மையில் அன்று தமிழகம் பொங்கி இருந்தால் ஓரளவு தீர்வு ஈழதமிழருக்கு கிடைத்திருக்கும்
அன்று ஒருவரும் வாய்திறக்கவில்லை, ஏன் என்றால் அப்படித்தான். ஈழத்தில் தீர்வா? பின்னே நாம் எப்படி அரசியல் செய்ய? வேண்டாம் ஒரு முடிவும் பெறாமலே போகட்டும்
அதனை விட இன்னொரு வாய்ப்பு ஒருகாலமும் புலிகளுக்கு கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும், மொத்த சிங்கள ராணுவமும் துப்பாக்கியினை எறிந்துவிட்டு அழுத தருணம் அது
அன்று ஒரு தீர்வு கிடைத்திருக்க வேண்டும், ஆனால் ஒரு குரலும் இங்கு இல்லை, நடராசன் மகா அமைதி
நிச்சயம் புலிகளுக்கு தமிழக இன உணவாளர்கள் செய்த மாபெரும் துரோகம் அது, அன்றே மனதார செத்தார் பிரபாகரன்
அதன்பின்னும் புலிகள் நார்வே குழுவோடு பேசினர், யாரோடெல்லாமோ பேசினர், இங்கிருந்து ஒரு ஆதரவு இல்லை
பின் எப்பொழுது இந்த உணர்வாளர்கள் வந்தார்கள்?
புலிகளை அழிக்க உலகம் திரண்ட அறிகுறி தெரிந்தது, கலைஞர் ஆட்சியில் இருந்தார் , போதாதா? குவிந்துவிட்டார்கள்
உலகத்தார் ஒத்துழைப்புபடி சிங்கள ராணுவம் வெற்றிபெற்றது, புலிகளுக்கோ யாருமில்லை
சிரிய அதிபருக்காவது ரஷ்யா வந்தது, இலங்கையில் ஆச்சரியமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் சிங்களனையே ஆதரித்தது, சீனா உட்பட
இப்படி புலிகளை உலகம் அழிக்க, சாதுர்யமாக பழியினை கலைஞர் மேல் போட மறுபடி களம் கண்டார் நடராசன்
எந்த நடராசன்? கலைஞரால் வளர்க்கபட்டு அவருக்கு திருமணம் செய்வித்து அவருக்கு அரசு வேலையும் கொடுக்கபட்ட அதே நடராசன்
கலைஞரை எதிர்த்து கும்மாளமிட்டார்களே தவிர, “கலைஞர் மத்திய அரசிலிருந்து வெளியேறினால் அதிமுக மத்திய அரசை ஆதரிக்கும், பிரபாகரனை கொல்லாமல் இலங்கையில் அமைதி இல்லை என சொன்ன ஜெயலலிதாவினை யாரும் குற்றம் சாட்டவில்லை”
ஏன் என்றால் அப்படித்தான், நடராஜனும் அந்த முகாமிலே இருந்தார்
ஆனால் கலைஞரை திட்டும் கோஷ்டி பெருகியது, சீமான் வேல்முருகன் திருமுருகன் என் அது வளர்ந்தது
அவர்கள் பேச பேச பல தரப்பில் இருந்து அவர்களுக்கு உதவி வந்தது. மணல் மாபியா முதல் பல அதிமுக ஆதரவு கொள்ளையர்கள் உதவினர்
யாரெல்லாம் என்பதற்கு சீமான் திருமணத்திற்கு வந்த பிரபலங்களே சாட்சி, அதில் நடுநாயகமாக வீற்றிருந்தார் நடராசன்
அந்த ஒற்றை காட்சி போதும், ஆயிரம் விஷயங்களை சொல்ல
இனி கலைஞரை எதிர்க்க, திமுகவினை பாதிக்க ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக அந்த முள்ளிவாய்க்கால் மண்டபம் உருவாக்கபட்டது
யாரெல்லாம் முள்ளிவாய்க்கால் கொடுமை நடக்க முழு காரணமாக இருந்தார்களோ அவர்கள்தான் அதனை உருவாக்கினார்கள்
கலைஞர் ஆலோசனைபடி 1980களிலே தீர்வு ஏற்பட்டிருக்குமானால் யுத்தம் தொடர்ந்திருக்காது, முள்ளிவாய்க்காலும் நடந்திருக்காது
ராஜிவ் கொலைக்கு பின் புலிகளை கைகழுவினார் கலைஞர், இவர்கள்தான் கலைஞரை எதிர்க்க அவர்களை ஆதரித்தார்கள், முள்ளிவாய்க்கால் நடக்க மறைமுக காரண இவர்கள்தான்
அதிலும் விளாரில் அமைக்கபட்ட முள்ளிவாய்க்காலுக்கான நிதி திரட்டல் சுவாரஸ்யமானது
நடராஜன் கார் இறக்குமதி மோசடியில் சிக்கினார், விளார் கிராமத்தில் அந்த நிலமும் சர்ச்சைகுள்ளானது, புறம்போக்கு நிலம் இருந்தது
யோசித்த நடராசன் ஒரு மேடையிலே காரினை ஏலம் விட்டார், ஆம் அது இருந்தாலும் சிக்கல். பின் தன் சொந்த நிலத்தை முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்ட கொடுத்ததாக சொன்னார்
இப்படி மோசடி கார் பணம் , புறம்போக்கு நிலம் இரண்டையுமே தன் தியாகத்தால் மறைத்தார் நடராசன்
(இதனால்தான் பின்பு ஜெயா முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஒரு பகுதியினை இடித்தார், அவருக்கு டெல்லியில் இருந்து வந்த உத்தரவு அப்படி)
ஆக இந்த நடராஜன் எனும் நபர் சுத்த சுயநலவாதி. புலிகளுக்கு இவர் உண்மையான நண்பனே அல்ல, இவர் பேசிய தமிழ் தேசியம் இன்னபிற எல்லாம் கலைஞரை எதிர்க்க வேண்டும் அதில் ஜெயா பலன்பெற வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறு இல்லை
ஜெயா இருக்கும் வரை தான் ஆடலாம் என்பது அவருக்கு தெரியும், ஆடினார்
ஜெயா இல்லா நிலையில் ஆடலாம் என்றால் அவரால் முடியவில்லை. 1989களில் அனுபவமில்லா ராஜிவினை ஏமாற்றியது போல 2017களில் டெல்லியினை அவரால் நெருங்க முடியவில்லை
அடித்து கடாசியது டெல்லி, தன் சாகசங்கள் எதுவும் எடுபடா நிலையிலும் தான் கலைஞரை வீழ்த்த போட்ட சாகச பழைய திட்டங்கள் தனக்கு எதிரான சங்கிலியாக வருவதை எண்ணி மனம் நொந்தார்
அது அவருக்கு தீரா சோகமாகி மனிதர் நோய்ற்றார், உறுப்பு மாற்றியும் தீர்வில்லை
உறுப்பினை மாற்றி ஒருவன் வாழ்வதாக இருந்தால் அது சாகாவரம் அல்லவா? வலுமிக்கவன் எவனாவது சாவானா?
பின் ஆண்டவன் என ஒருவன் எதற்கு?
உறுப்பு மாற்றி வாழ்ந்தவன் யாருமில்லை. தமிழகத்து ராமச்ந்திரன் முதல் ஏராள உதாரணம் உண்டு
அப்படி செத்தும் போனார் நடராசன்
இப்பொழுது சிலர் கிளம்புகின்றான், அதாவது நடராசன் பெரும் தமிழ் போராளியாம், தமிழ் தேசியவாதியாம். அவரின் மரணத்தில் சந்தேகமாம்
இவர்களுக்கு வேண்டியவர்கள் எப்படி செத்தாலும் அதில் சந்தேகமாம்
அந்த பதர்கள் எவனும் அப்பல்லோவில் ஜெயா செத்தது பற்றி வாயே திறக்கவில்லை என்பதுதான் மர்மம்
சசிகலா மேல் பழிபோட ஜெயா மரணத்தை எல்லோரும் மர்மம் என்றார்களாம், ஆனால் மாபெரும் தமிழ்தேசியவாதி என இவர்கள் சொல்லும் நடராசனின் மரணம் சந்தேகமாம்
இவர்களை எல்லாம் அப்படியே கப்பலில் ஏற்றி ஐ.எஸ் இயக்கத்திடம் அனுப்ப வேண்டும்.
நடராசன் என்பவர் தமிழகத்தை பிடித்த ஒரு வியாதி. எப்படியோ தன் பிடியில் சிக்கிவிட்ட ஜெயா எனும் குட்டிசாத்தானை வைத்து பெரும் ஆட்டம் ஆடிய மாய மந்திரவாதி
இதனால் தமிழகம் அடைந்த கடும் சீரழிவு , ஈழம் அடைந்த பேரழிவு இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து வரும் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை