நடராஜன் என்ன நாட்டு தியாகியா?

மறுபடியும் தான் ஒரு அவசர குடுக்கை என நிரூபித்திருக்கின்றார் சசிகலா

15 நாள் பரோல் எதற்கு? கணவனை நலம் விசாரிக்க 3 நாள் போதாதா என கேட்கமாட்டார்களா?

கொஞ்சம் அவசரபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் சிறைக்கோலம் உடனே கிட்டியிருக்காது, முதலமைச்சராக அவர் காட்டிய அவசரமே அவரின் சிக்கலுக்க்கு காரணம்

அது இருக்கட்டும்

அம்மணிக்கு எதற்கு பரோல்? ஒரு பர்தாவினை மாட்டிவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதானே?


நடராஜன் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு தமிழக அரசு ஒத்துழைகவில்லை : சீமான் ஆக்ரோஷம்

ஏம்பா சைமன், அந்த ஜெயா மர்ம சாவு பற்றி ஏதாவது சொல்லியிருக்கின்றீரா? நடராஜனுக்கு ஏன் இத்தனை துடிப்பு?

நடராஜன் என்ன நாட்டு தியாகியா? இல்லை பலமுறை முதல்வராக இருந்தவரா?

அவருக்கு உடல்நலம் இல்லாமல் போனது கடந்தவாரத்திலா?

6 ஆண்டுகாலம் ஜெயா ஆட்சிதான் நடந்தது, அவருடனே சசிகலாதான் இருந்து ஆட்சி செய்தார். அப்பொழுது செய்திருக்க முடியாதா?

சசிகலா ஆதிக்கம் முடிந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், அப்பொழுது செய்யாத சிகிச்சையினை பழனிச்சாமி ஆட்சியில்தான் செய்ய முடியுமா?

ராஜிவ் கொலைக்கு சிலநாட்கள் முன்பாக வெளிநாடு பறந்தவர் நடராஜன், இன்னும் பல வெளிநாட்டு பயணங்களை செய்தவர் அவர்

ஏன் சிகிச்சைக்காக அவரால் செல்ல முடியாதா?

ஏதோ நடக்கின்றது, நடராஜனுக்கு ஏதோ நடந்து அது பழனிசாமி மீது பழியினை போட திட்டம் நடக்கின்றது.

நடராஜனுக்கு ஒன்று என்றால் அங்கிள் சைமன் பொங்குகின்றார் அல்லவா?

இதுதான் முதலாளிபாசம் விசுவாசம் என்பது.

இன்னும் பாருங்கள் யாரெல்லாம் பொங்கிகொண்டு வருவார்கள் என்று, அவர்கள் அனைவரும் கலைஞரை திட்டியவர்களாகவும், இப்பொழுது மோடியினை திட்டி கொண்டிருப்பவர்களாகவும், பிரிவினைவாதம் பேசியவர்களாகவும் இருப்பார்கள்

அத்தனை பேருக்கும் படியளந்தவர் அந்த நடராஜன் என்பதுதான் இனி காணபோகும் காட்சி.


மா. நடராசனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அவரின் அல்லக்கைகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

உறுப்பைத்தானே மாற்ற முடியும்? அவரின் இயல்பான குணத்தையா மாற்ற முடியும்?

ஆனாலும் ராமசந்திரனுக்கும் தான் உறுப்பு மாற்ற சிகிச்சை நடந்தது, அதன் பின் என்ன ஆனது என உலகிற்கே தெரியும்

அது திமுகவில் இருந்து உருவிய கட்சி என்பதால் அதன் தலைவர்களுக்கு எல்லாம் உறுப்புகள் மாற்றபட்டு கொண்டே இருக்கின்றன‌

அடுத்த தலைவர் என சொல்பவர்கள் இதனை கவனித்துகொண்டு இப்பொழுதே உறுப்புகளுக்கு ஆர்டர் கொடுப்பது நல்லது.

மிஸ்டர் பழனிச்சாமி புரிகின்றதா?

சிவாஜி கணேசனுக்கு சில சென்டிமெண்ட் உண்டாம், அதனால் நீங்கள் மணிமண்டபம் திறக்க செல்லவில்லையாம்

அதிமுகவிற்கும் இப்படி “தலைவர்கள் கண்டம்” எனும் சென்டிமென்ட் உண்டு, கவனித்துகொள்ளுங்கள் .