நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் குஷ்பூவும் பலருக்கு எதிரிகள்
நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் குஷ்பூவும் பலருக்கு எதிரிகள். காரணம், அவர்கள் பிரபலம், அதுவும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பல விஷயங்களை நெற்றிலடித்தார் போல சொல்லிவிடுவார்கள்,
ஒரு வகையில் இருவரும் பெரியாரிஸ்டுகள், அவர்களை போல பலருக்கும் சிக்கலான காலம் இது
இவர்களை குறிவைத்து தொடுக்கபடும் வழக்குகளும், அவர்கள் மீது நடத்தபடும் தாக்குதல்களும் வாடிக்கையானவை
ஆனால் இருவரும் எதற்கும் அஞ்சியதாகவோ, பின் வாங்கியதாகவோ இல்லை , அவர்கள் போக்கில் பேசிகொண்டேதான் இருக்கின்றார்கள்
இப்பொழுது தமிழகத்தில் சில படையெடுப்புகள் நிகழ்கின்றது அல்லவா? படையெடுப்பு என்றால் அடித்து நொறுக்குவது அல்ல, இது வயல்களில் பூச்சிகள் வருவது போல சத்தமில்லாமல் பரவும் ஒரு தாக்குதல்
அதன் உச்சமாக கமலஹாசனை சு.சாமி டிவிட்டரில் வம்பிழுக்கின்றார், பல வழக்குகள் போடபடுகின்றன
குஷ்பூவிற்கும் எதிரிகள் அதிகம் இந்து மதத்தை காப்பதாக சொல்லிகொள்பவர்கள், கலாச்சார காவலர்கள், புலிகளை பற்றி உண்மையினை அவர் சொன்னதால் பொங்கியவர்கள், திமுகவில் இருக்கும்பொழுது அவருக்கெதிரான சதி என பெரும் எதிரிகூட்டம் அவருக்கு உண்டு
ஆனால் அவர்கள் எல்லாம் குஷ்பூவிற்கு எதிரிகள் எனும் தகுதி கூட இல்லாதவர்கள் இன்னொருவிஷயம்
குஷ்பூ வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் புரளி கிளப்பபடிருக்கின்றது, அப்படி காவல்துறைக்கு தகவலை சொன்னவர் பெண் என்கின்றார்கள், விசாரணை நடக்கின்றது
இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவர் குஷ்பூ அல்ல, இதனை போல ஏராளமான மிரட்டல்களை தாண்டித்தான் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்கின்றார், இந்த மிரட்டல்கள் எல்லாம் அவருக்கு தூசு
அதுவும் அவர் வெளிநாட்டில் இருக்கும்பொழுது மிரட்டியிருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் பரிதாபம்.
கோடான கோடி ரசிகர்களின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பெரும் பொறுப்பில் இருக்கும் அவருக்கு இப்படியான மிரட்டல் வந்திருப்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.