நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?
ரஜினியின் ஜாதகத்தில் எந்த கட்டம் எப்படி என தெரியவில்லை, ஆனால் அவர் எங்கு சென்றாலும் பேச்சு அவரைபற்றியே இருக்க வேண்டும் என்பது அவர் விதி
சினிமா, அயல்நாடு என எங்கெல்லாமோ அவரை பற்றிய பேச்சு வந்து, இப்பொழுது அரசியலுக்கும் வந்தாயிற்று
எல்லா டிவிக்களும் பேசுகின்றன,அதில் வேந்தர் டிவியும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? என பட்டிமன்றம் வைத்திருக்கின்றது
இதில் திமுக சார்பாக ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு என்பவரும் அழைக்கபட்டிருக்கின்றார்
நடிகர்கள் என்ன கிழித்துவிட்டு அரசியலுக்கு வந்தார்கள் என்ற சர்ச்சை ஓடிகொண்டிருக்கும் விவாதம் அது, அதில்தான் அப்பாவு வந்திருக்கின்றார்
அப்பாவு யார்? பள்ளி வாத்தியார். கிட்டதட்ட ஓய்வுபெறும் காலத்தில்தான் தா.மா.கா மூலம் அரசியலுக்கு வந்தவர்
அதன் பின் திமுகவில் இணைந்தவர், இந்த பேட்டியில் ரஜினிகாந்தினை கிழித்து எறிகின்றார், மகா மட்டமாக திட்டிகொண்டிருக்கின்றார்.
அவர் என்னமோ 3 வயதில் இருந்தே மக்கள் பணியில் இருந்தது போலவும், அண்ணாவோடு சிறை சென்றவர் போலவும் பேசிகொண்டிருக்கின்றார்
ரஜினி அப்பாவுக்கு முன்பே கலைஞரோடு பழகியவர் மிஸ்டர் அப்பாவு, ரஜினி மூப்ப்பனார் கலைஞர் கூட்டணியில் முளைத்தவர்தான் நீங்கள், மறந்துவிட்டீரா?
ஏம்பா வேந்தர் டிவி, ஆண்டாண்டு காலமாக திமுகவில் உள்ள யாருமே உங்களுக்கு தெரியவில்லையா? தமாகாவிலிருந்து வந்த அப்பாவுதான் கிடைத்தாரா?
மிஸ்டர் அப்பாவு, 1996ல் மூப்பனார் கட்சியில் நீர் இருந்தபொழுது, ரஜினியின் படத்தோடு கூடிய சைக்கிள் சின்னத்தில் வாக்கு வாங்கி முதல் முறையாக வெல்லவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்?
மறுக்க முடியுமா மிஸ்டர் அப்பாவு, அன்றெல்லாம் ரஜினி நடிகராக தெரியவில்லையா? என்ன கொடுமை அய்யா இது?
அன்று மூப்பனார் இருந்தபொழுது, சாதாரண கிராமத்து வாத்தியாரான அப்பாவு ராதாபுரம் முழுக்க பிரபலமாக ரஜினியின் வசனமும், சைக்கிள் சின்னமும் தேவைபட்டதாம்
ஆனால் அதே ரஜினி இன்று இவருக்கு ஏமாற்றுக்கார நடிகனாம்.
இந்த ஒரே கேள்வியில் அப்பாவு அவுட். அப்பாவு அரசியலுக்கு வந்ததே ரஜினியின் படத்தால்தான், அதெல்ல்லாம் மறந்த நன்றி கெட்டவரா அப்பாவு?
இதனை குறிப்பிட்டு சொல்ல ஒரு பயலும் இல்லாத அல்லது தெரியாதவர்கள் எல்லாம் விவாதம் நடத்துகின்றார்களாம்