நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா
நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா, நெல்லையில் சிலை அமைக்கபடுகின்றது
அஜித் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாம், அதனால் சிலையாம், தஞ்சையில் காவேரி காய்ந்து மக்கள் படாதபாடு படும்பொழுது இது மகா அவசியமா என யாரும் கேட்கவில்லை
நெல்லையிலும் சிலையாம், அது வெண்ணிற ஆடை மூர்த்திசிலைபோல் இருக்கின்றது என விஜய் ரசிகர்கள் சொல்லிகொள்கின்றார்கள்
(அப்படித்தான் இருக்கின்றது, ஷாலினி பார்த்துவிட்டாரா என்பது தெரியவில்லை, விஷயம் தெரிந்தால் அவர் விவாகரத்து வரை செல்ல வாய்பிருக்கின்றது)
இனி விஜய்,தனுஷ் எல்லோருக்கும் சிலை வைக்கபடும். சிம்புவிற்கு கூட நிறுவபடலாம்
ஓவியா ரசிகர்கள் இப்பொழுது பல சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கலாம்
நாங்கள் எப்பொழுதோ குஷ்பூவிற்கு கோவிலே கட்டிவிட்டோம், இவர்கள் இப்பொழுதுதான் சிலைக்கே வருகின்றார்கள்
சிறுபிள்ளைகள் என்பது இதுதான், சரியாகத்தான் இருக்கின்றது
இவர்களை போல இங்கு சிலை வைக்கும் திட்டம் சங்கத்திற்கு இல்லை, அது பறவைகளின் டாய்லெட் ஆக மாறினால் மனம் தாங்குமா?
அதனால் தலைவியின் மெழுகு சிலையினை லண்டன் மியூசியத்தில் அமைக்க சங்கம் திட்டமிடுகின்றது
அத்தோடும் விடமுடியாது, குஷ்பூவிற்கு இனி தேர் செய்யலாமா? என சங்கத்தின் சார்பில் தீவிரமாக விவாதிக்கபடுகின்றது
விரைவில் தங்க தேர் செய்து திருவிழா நடத்தி விட வேண்டியதுதான்..