நடிகர் ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம்..
நாட்டில் இருக்கும் சிக்கல் நாட்டில் போதாது என்றால், ஊடகங்கள் சொல்படி பார்த்தால் புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது
சிக்கல் என்னவென்றால்,ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம், “என்னை திருமணம் செய்து யாராவது எனக்கு வாழ்வுகொடுங்கள்..” என கெஞ்சிகொண்டிருக்கின்றார் நடிகர் ஆர்யா
என்னாச்சி மனிதருக்கு? அந்த அளவு கிராக்கி இருந்திருந்தால் சினிமா நடிகைகளே தூக்கியிருப்பார்கள், ஆக மனிதரை திருமணம் செய்துகொள்ள நடிகைகள் ஒருவர் கூட தயாரில்லை
இப்பொழுது ஊரெல்லாம் நம்பர் கொடுத்து என்னை கட்டிகொள்ளுங்கள் என சொல்வதாக செய்திகள்
அப்படியும் ஒன்றும் சிக்கவில்லையாம்
எப்படி இருந்த ஆர்யா இப்படி ஆகிவிட்டார்??
மனிதருக்கு தமிழக பெண்களை பற்றியோ, யதார்த்தம் பற்றியோ தெரியவில்லை. ஏதேனும் போன் வந்தால் ஆர்யா எதிர்கொள்ள போகும் முதல் கேள்வி எது?
“உங்களுக்கு ஏன் இன்னும் பெண் கிடைக்கவில்லை, ஆக உங்களிடம் ஏதோ சிக்கல் உள்ளது அப்படித்தானே?”
இந்த ஆர்யாவின் யோசனையற்ற செயலால் அவருக்கு தமிழக யதார்த்தபடி இங்கே பெண்ணே கிடைக்காது என்பது மட்டும் உறுதி
அவர் தன் நம்பரை பிலிப்பைன்ஸ் , பிரேசில் போன்ற நாடுகளில் வீசி பார்க்கலாம், உடனே சிக்கும் என்கின்றார்கள்