நடிகர் ராஜ்சேகர்

நடிகர் ராஜ்சேகர் மறைந்துவிட்டாலும் அவரை பற்றிய செய்திகளை பார்க்கும் பொழுது சிலவலிகள் வரத்தான் செய்கின்றன‌

அவருக்குள் சில திறமை இருந்தது, ஒரு தலைராகம் எனும் அற்புதமான காவியத்தில் அவருக்கு பங்கு இருந்தது

இன்றும் டி.ராஜேந்தரின் படங்களை எல்லாம் பாருங்கள், அதில் ஒரு தலைராகம் தனித்து நிற்கும். மற்ற படங்களில் ஏதோ ஒன்றை இழந்தது உங்களுக்கே தெரியும்

ஆம் ஒருதலை ராகம் படத்தில் ராஜசேகர் இருந்தார், அதன் பின்னரான படங்களில் அவர் இல்லை

தனக்கான சரியான துணை சினிமாவில் கிடைக்காமல் அவர் போராடியிருக்கின்றார்

ஒரு பொன்மாலை பொழுது என பாடி வந்து அவர் நடிகரனானும் அதன் பின்பும் அவருக்கான இடம் கிடைக்கவில்லை

மனசுக்குள் மத்தாப்பு எனும் படத்தின் இயக்குநர் அவர்தான், அந்த படம் வித்தியாசமான கதை, சரண்யா அதன் நாயகி. அவரை திருமணமும் செய்தார் ராஜசேகர்

சரண்யா அன்று கத்தோலிக்க கிறிஸ்தவர் அவர் பெயர் ஷீலா கிறிஸ்டினா என்பது

ஆம் ராஜசேகரின் முதல் மனைவிதான் சரண்யா, 1980களின் இறுதியில் நாயகியாக வந்து இன்று மனோரமா, லட்சுமி போன்ற பெண் ஜாம்பவான்களின் இடத்தை பிடிக்க போராடும் அந்த சரண்யா

சினிமாவில்தான் தனக்கு துணை யாருமில்லை என தவித்த ராஜசேகருக்கு மணவாழ்வும் அப்படித்தான் இருந்திருக்கின்றது, சரண்யாவும் பிரிந்துவிட்டார்

சரண்யா அதன் பின் காணாமல் சென்று பின் அம்மாவுக்கு திரும்பி பொன்வண்ணனை திருமணம் செய்ததெல்லாம் தனி கதை

ராஜசேகரன் தாரா என்பவரை திருமணம் செய்தார், 30 ஆண்டுகள் அவர்தான் துணை

ஆயினும் அவர்களுக்கு குழந்தை இல்லை அதைவிட கொடுமை குடியிருக்க வீடுமில்லை

இப்பொழுதும் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல்தான் அவர் இறந்தார் என்கின்றார்கள்

சினிமா எனும் மாய உலகம் அப்படியானது

இந்த உலகில் சிக்கினால் வெளிவர முடியா விஷயங்கள் சில உண்டு

மந்திர தந்திரம், கள்ள கடத்தல் கோஷ்டி, அரசியல், மது, அழகான இளம்பெண்ணின் கண்கள் என சில வகை அது

அவைகள் சிலந்திவலை, அதில் வீழ்ந்தோர் ஏராளம். சினிமாவும் அதில் ஒருவகை

அதில் சிக்கி ஜெயிப்பது மிக சிலர், வீழ்ந்துவாழ்க்கையினை தொலைத்தோர் ஏராளம்

சூதாட்டம் கூட பணமில்லாவிட்டால் நம்மை தானாக வெளிதள்ளிவிடும், பணமில்லா மனிதனை கணிகை கூட விரும்பமாட்டாள்

ஒரு கட்டத்தில் அதில் ஞானம் கிடைக்கும்

ஆனால் தனக்கு திறமை இருப்பதாக நம்பி மோதி மோதி வாழ்க்கையினை தொலைக்குமிடம் சினிமா ஒன்றே

தகுதி திறமை எல்லாம் ஒரு பக்கம் இருப்பினும், சிறந்த‌ வாய்ப்பும் இன்னும் சில சந்தர்ப்பங்களும் சினிமாவில் அவசியம்

அது கிடைத்த தகுதியில்லாதோர் வெற்றிபெறுவர், கிடைக்கா தகுதியிருப்போர் தோல்வியுறுவர்

இந்த ராஜசேகர் எனும் பரிதாபத்திற்குரியவர் இரண்டாம் வகை

சினிமாவில்தான் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால் சொந்தவீட்டில் குடியேற வேண்டும் என்ற எண்ணமும் ஈடேறாமலே சென்றும் விட்டார்

ஒளிப்பதிவாளராக, நடிகனாக, இயக்குநராக பல போராட்டங்களை அவர் நடத்தியிருக்கின்றார்

மூன்றையுமே ஒழுங்காக செய்தும் அவர் தோற்றவரிசைக்கு சென்றிருக்கின்றார் என்றால் வாய்ப்புகளும் சந்தர்ப்பமும் காலமும் ஒத்துழைக்கவில்லை என்பதே பொருள்

ஒருதலை ராகம் படத்து காட்சிகள், அந்த ஒரு பொன்மாலை பொழுது எனும் அற்புதமான பாடல், அந்த மனசுக்குள் மத்தாப்பூ படத்தின் அதி அற்புத காட்சிகளில் எல்லாம் ராஜசேகர் இருந்து கொண்டே இருப்பார்.

ராஜசேகர் போல சினிமாவினைவிட்டு சீரியலுக்கு வந்தவர் சரண்யா, ஆனால் சினிமாவிலும் பிடியினை கொண்டுவந்தார்

பெண் என்றால் சினிமாவும் இறங்கும் போல, ஆனால் ராஜசேகருக்கு இறங்கவில்லை

அவரின் இறுதி நொடியிலும் விதி சிரித்திரிக்கின்றது

ஆம் அவரின் கடைசி போராட்டம் நிகழ்ந்த மருத்துவமனையில் அவர் போராடிகொண்டிருந்த பொழுது சக நோயாளியாக பக்கத்து அறையில் இருந்திருக்கின்றார் சரண்யா

இருவரின் மனமும் என்னபாடு பட்டிருக்கும், என்னவெல்லாம் சிந்தித்திருக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்

எவ்வளவோ கதைகள் பேசும் தமிழ் பத்திரிகைகள் இதை பற்றி பேசுமா என்றால் பேசாது, நாம் மட்டும்தான் பேசுவோம்

நம் பத்திரிகை தர்மம் அது, உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் நம் எழுத்து தர்மம்..