நடிகை கஸ்தூரி மனம் திறக்கிறார்…

தன்னைபற்றி வந்த செய்தி தவறு என மறுக்கின்றது நடிகை கஸ்தூரியின் முகநூல் கணக்கு

ஆனால் அவர் சொன்னதாக சொன்ன செய்தி மீடியாக்களில் வந்துகொண்டிருக்கின்றது

இதில் எது போலி என தெரியாமல் திணற வேண்டியிருக்கின்றது..

கஸ்தூரியின் முகநூல் கணக்கு உண்மையானது என்றால், அந்த மீடியாக்கள் கண்டிக்கபட வேண்டியவைகள்…

கடும் நடவடிக்கைக்கும் உட்படுத்த படவேண்டியவவை…

இதோ கஸ்தூரி என‌ ஒருபெண் கதறுகின்றாள், அவள் குரலுக்கு வலுசேர்க்க யாருமில்லை, பெண்கள் குரலுமில்லை

அந்த மீடியாவினை கண்டிக்க ஒருவருக்கும் துணிச்சல் இல்லை

நாளை யாராவது ஒரு பிரபலம் பெண்களை ஏதும் சொல்லிவிட்டால் மொத்தமாக கொடிபிடித்து கிளம்புவார்கள், அதனை மகளிர் நலம் காப்பதாக சொல்லும் அந்த மீடியாக்களும் பிரசுரித்து கொண்டிருக்கும்