நடிகை சாவித்திரி கதையினை படமாக எடுத்தாயிற்றாம்

நடிகை சாவித்திரி கதையினை படமாக எடுத்தாயிற்றாம்

ஆளாளுக்கு விமர்சனம் சந்திப்பு என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

யாராவது இந்தி நடிகை ரேகாவிடம் உங்கள் சித்தி கதை எப்படி என்றோ, இன்னும் சிலரிடம் உங்கள் பெரியம்மா கதை எப்படி என்றோ கேட்டதாக தெரியவில்லை

அந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பின்னிவிட்டார், விருது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலர் கிளம்பியிருகின்றார்கள்

நடிகையர் திலகத்தின் கதைக்கு மங்கையர் திலகம் குஷ்பு நடிக்கவைக்கபடவில்லை என்ற கோபத்தில் சங்கம் அப்படத்தை புறக்கணித்துவிட்டது

மீறி கீர்த்தி சுரேஷுக்கு விருது என்றால் சங்கம் மாபெரும் போராட்டத்தை நடத்தும்

தலைவிக்கு விருது கொடுத்துவிட்டு ஒரு 10 வருடம் கழித்து இந்த கீர்த்தி பக்கம் வரலாம்

தலைவி நடித்திருந்தால் இப்படம் மாபெரும் சாதனை படைத்திருக்கும், இதனை சொன்னால் பலருக்கு புரிவதில்லை

தமிழனுக்கு எல்லாமே மெதுவாகத்தான் புரியும்