நடிகை புவனேஸ்வரி பெரும் சிக்கலில் ….
நடிகை புவனேஸ்வரி பெரும் சிக்கலில் சிக்கியிருக்கின்றார், அதாவது இலங்கையினை சேர்ந்த பெண்ணை வேலைக்கு வரவழைத்து போதைக்கு அடிமையாக்கியதாக செய்திகள் வந்தன.
அந்த பெண் இன்னும் மீட்கபட்டதாக தெரியவில்லை
என்னது இலங்கை தமிழ்பெண்ணுக்கு ஆபத்தா? பச்சை தமிழன் ஆட்சியில் தமிழக பெண்ணுக்கு சிக்கலா? அப்படி தமிழகம் பொங்காதா என்றால் பொங்காது
அதாவது இலங்கை தமிழ்பெண்ணுக்கு சிங்களனாலோ அல்லது வட இந்தியனாலோ சிக்கல் வந்தால்தான் இங்கு பொங்குவார்கள், தமிழச்சி புவனேஸ்வரியால் சிக்கல் வந்தால் கண்டுகொள்ளமாட்டார்கள்
இது என்னய்யா தமிழச்சி தமிழச்சியினை கொடுமைபடுத்தாமல் சீனாக்காரியினையா கொடுமைபடுத்த முடியும்? என சொல்லி சென்றுவிடுவார்கள்
அப்படி இலங்கை பெண் செய்திகள் வந்தும் மறைக்கபட்டன, அங்கிருந்து என் மகளை போதைக்கு அடிமையாக்கி புவனேஸ்வரி வைத்திருக்கின்றார் என்றுதான் கூக்குரல் வந்தது
புவனேஸ்வரி போதை பழக்கத்திற்கு ஒருவரை அடிமையாக்கினாரா? அவரை பார்த்தாலே பலருக்கு போதை வரும்பொழுது இது எப்படி என விசாரித்தால் தகவல்கள் பலமாதிரி வருகின்றன
அதாவது அவருக்கு ஒரு வாலிப மகன் இருக்கின்றானாம், அவர் பெயர் மிதுன் சீனிவாசனாம்
(இதிலே புவனேஸ்வரியினை பார்த்து வந்த போதை எல்லாம் இறங்கி தெளிந்தது விடும்)
அவர்தான் அந்த இலங்கைபெண்ணை காதல் செய்து வரவழைத்து மணம் முடித்து மறைத்து வைத்ததாக சில செய்திகள் வந்தன என்றால், நேற்று வந்திருப்பது அதிர்ச்சி ரகம்
அவர் இன்னொரு பெண்ணோடு முகநூலில் பழகியிருக்கின்றார், அப்பெண் முதலில் காதலித்தாலும் இவரின் உண்மை முகம் கண்டு விலகியிருக்கின்றார்
அதில் கோபமுற்ற மிதுன் சீனிவாசன் உன்னை சுவாதி போல வெட்டுவேன், இந்திரஜா போல கொளுத்துவேன் என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றார்
பயந்த அப்பெண் காவல்துறையில் புகார் அளித்து, இப்பொழுது மிதுன் சீனிவாசன் கைதுசெய்யபட்டிருக்கின்றார்
இலங்கை பெண் விவகாரம் பெரிதான நிலையில், இப்பொழுது இந்த மிரட்டல் வழக்கும் பெரும் சிக்கல் ஆகின்றது
அந்த இலங்கை குடும்பம் கண்ணீர் விட்டு நிற்கின்றது
இதற்கு ஈழ மக்களை வாழவைக்க அவதரித்திருக்கும் ஒரு தமிழின தலைவனும் வாய் திறக்கமாட்டார்கள், இதே சிங்களன் செய்திருந்தால் வாய் மூடமாட்டார்கள்.
புவனேஸ்வரி நடிகை மட்டுமல்ல, ஒரு கட்சியில் பெரும் பதவியிலும் இருந்தார், அக்கட்சி இப்போழுது எப்படி இருக்குமோ தெரியாது
ஆனாலும் புவனேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? அதுவும் இப்படி பெரும் வில்லனா என்ற அதிர்ச்சி அகல நெடுநேரம் ஆகும் போல…