நடிகை ராதிகா கொழும்பில் சிக்கியிருக்கின்றார்

நடிகை ராதிகா கொழும்பில் சிக்கியிருக்கின்றார்

நடிகை ராதிகாவின் தாயார் இலங்கையர் என்பதால் அந்நாடுக்கும் ராதிகாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகம், அதை ராதிகாவின் சீரியல்களில் கூட நீங்கள் பார்க்கலாம்

அடிக்கடி அங்கு செல்லும் ராதிகா இரு தினங்களுக்கு முன்பு அங்கு சென்றிருக்கின்றார்

குண்டுவெடிப்பு நடந்த இடம் அருகேதான் அவர் தங்கியிருந்தார் என்கின்றன செய்திகள்

சில தரப்பு சொல்லும் தகவல் உறுதிபடுத்தபடவில்லை

இலங்கையில் அவசரநிலை பிரகடனபடுத்து வாட்சப் முகநூல் இன்னும் பல விஷயம் முடக்கபட்டிருப்பதால் ராதிகா தரப்பு ஒரு வித கலக்கத்தில் இருக்கின்றது

ஒரு காலத்தில் தனுஷ்கோடி புயலில் சாவித்திரி சிக்கியது போன்ற நிலை இது

ராதிகா மிக நலமாக திரும்புவார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது, நிச்சயம் அவர் நலமுடன் திரும்புவார்