நமக்கு எப்பவுமே தொடங்க தெரியுமே தவிர முடிக்க தெரியாது
நமக்கு எப்பவுமே தொடங்க தெரியுமே தவிர முடிக்க தெரியாது
பாபர் மசூதியினை இடித்தோம் அதன்பிறகு என்ன செய்ய என இன்றுவரை தெரியவில்லை
பசுமாடு முக்கியம் என்போம் , காக்கவேண்டும் என்போம் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதும் தெரியாது
கருப்பு பண ஒழிப்பு என்போம் அதிரடியாக தொடங்குவோம், அதற்கு பின் என்ன செய்ய என தெரியாமல் விழிப்போம்
பணமதிப்பினை ஒழித்து பொருளாதாரம் வளர்ப்போம் என்போம், பணமதிப்பு ஒழிப்பினால் ஏற்படும் சிக்கலில் முழிப்போம்
இப்பொழுது வங்கி பக்கம்வந்திருக்கின்றோம், ஏதாவது அழிச்சாட்டியம் தொடங்குவோம் பின் வழக்கம் போல முடிவு சொல்லாமல் ஓடிவிடுவோம்
என்ன செய்வது? நல்லதோ கெட்டதோ எதுவானாலும் நமக்கு தொடங்க மட்டுமே தெரியும் முடிக்க சுத்தமாக தெரியாது
இப்படி குழப்பமே நம் கொள்கையானதே ஏன்?
பாருங்கள் தமிழ்நாட்டில் கூட என்னவெல்லாமோ மிரட்டல் தொடங்கினோம், இப்பொழுது என்ன ஆயிற்று? ஒரு பயலும் பயந்ததாக தெரியவில்லை , தினகரன் குக்கர் போலவே விசில் விட்டு நம்மை அழைக்கின்றார்
ஆக நமக்கு தொடங்க தெரியும் முடிக்க சுத்தமாக தெரியாது என்பது தமிழ்நாடு வரை தெரிந்துவிட்டதோ???”