நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரபடும் : சந்திரபாபு நாயுடு

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரபடும் : சந்திரபாபு நாயுடு

தன் மாநில நலன் பாதிக்கபடுவதை உணர்ந்தவுடன் எப்படி சீறி கிளம்புகின்றார் நாயுடு, ஏற்கனவே சிவசேனை பாஜக உறவு கசந்த நிலையில் , கூட்டணிகள் எல்லாம் விலகும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் நகர்வு வாழ்த்துகுரியது

இப்பொழுது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் என்னாகும்?

பாராளுமன்றத்தின் இரண்டாம் பெரிய கட்சி அதிமுக அதனிடம் 36 எம்பிக்கள் உண்டு

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவே துருப்பு சீட்டு, அது எதிர்த்து வாக்களித்தால் மோடி கிளம்ப வேண்டியதுதான்

ஆனால் என்னாகும்?

“வல்லவராயனே நான் வாழவேண்டும் அய்யா, உனக்கு என்ன வேண்டும் 36 வோட்டுதானே, எங்கள் ஆட்சியினை நீ நீட்டித்தபொழுது உன் ஆட்சியினை நான் கலையவிடுவேனா?” என காலில் விழுந்து ஆதரிப்பார்கள்

இப்பொழுது ஜெயா இருந்தால் எப்படி சீறுவார் தெரியுமா? (அவர் இருந்தால் நிச்சயம் தீர்ப்பு வந்திருக்காது)

மிஸ்டர் மோடி உங்களுக்கு ஒரே வாய்ப்புத்தான்

“என்னை நீங்கள் பிரதமராக ஆதரிக்க வேண்டும் , என் அமைச்சரவையில் பாஜகவிற்கு இடம் உண்டு

இல்லாவிட்டால் எதிர்கட்சி கூட்டணியோடு நான் பிரதமராகிவிடுவேன்”

ஜெயா இல்லாத நிலையில் அடிமை கூட்டம் மோடியினை கைவிடாது, நிச்சயம் கைவிடாது. கூட்டணி அமைத்து மோடியினை வீழ்த்துவதோ இல்லை தேர்தலை கொண்டுவருவதோ இவர்களுக்கு தெரியாது

36 எம்பிக்களை வைத்திருக்கும் இவர்களுக்கு ஆட்சிக்கு வரும் வித்தையும் தெரியாது

நிச்சயம் மோடி காலில் விழுந்து அவரை ஆதரிப்பார்கள்

ஆக தமிழகத்தை கெடுத்த அதிமுக இப்பொழுது இந்தியாவினையும் கெடுக்க போகின்றது, அனைத்திந்திய அதிமுக என்பது சும்மா அல்ல

முழு இந்தியாவினையும் கெடுக்காமல் விடமாட்டோம் என்பது அது, வாய்ப்பு கிடைத்தாயிற்று கெடுக்காமல் விடுவார்களா?