நம்பியாற்று சிக்கலுக்கு என்ன செய்யலாம்
நம்பியாற்று சிக்கலுக்கு என்ன செய்யலாம் என பலர் கேட்டார்கள்
நம்பியாறு மட்டுமல்ல இந்த நெல்லை மாவட்ட பகுதிகள் பல வகைகளில் சீரழிக்கபட்டன, ஒரு மாவட்டம் ஏராளமான ஆபத்துக்களை கொண்டிருக்கின்றது என்றால் சாட்சாத் நெல்லை மட்டுமே
கூடங்குள அணுவுலை, விஜயநாராயண கடற்படை தளம், மகேந்திர கிரி ஆராய்ச்சி நிலையம் என மிக முக்கிய கேந்திரம் அங்குதான் உள்ளது நாளை யுத்தம் என வந்தால் நிச்சயம் பேராபத்து
ஒரு மாவட்டத்தில் இத்தனை முக்கிய கேந்திரங்கள் அமைந்திருக்க கூடாது, ஆனால் அமைத்தார்கள் யாரும் கேட்கவில்லை
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதனைவிட அபாய ஆலைகள் இயங்கிகொண்டுதான் இருக்கின்றன
மக்களை பாதிக்கும் ஏராளமான அபாயங்களை சுமந்துகொண்டிருக்கின்றது மதுரைக்கு தெற்கே உள்ள பகுதிகள்
இதற்கு காரணம் என்ன என கேட்டால் மிக எளிது
உருப்படியான ஒரு தலைவனும் அங்கிருந்து உருவாகவில்லை, காமராஜர் விருதுநகர்காரர் என்றாலும் சொந்த ஊர் மக்களுக்கே அவர் மீது அபிமானமில்லை
அவர் மணிமுத்தாறு அணை தவிர அப்பகுதிக்கு ஏதும் செய்யவுமில்லை என்பது இன்னொரு விஷயம்
அது என்னவோ தெரியவில்லை அக்காலத்தில் இருந்தே தென் தமிழகம் அப்படி புறக்கணிக்கபட்டிருக்கின்றது, பாரதியாரும் சரி, வ உ சியும் சரி அப்படித்தான் விரட்டபட்டிருக்கின்றார்கள்
சுதந்திர நாட்டிலும் காமராஜருக்கு பின் ஒருவரும் தெற்கே இருந்து எழவில்லை, இந்த கலிங்கபட்டி வைகோ தென்னக மக்கள் பற்றி கவலைபடுவார் என்றால் அவரோ அதற்கு தெற்கே கடலுக்கு சென்று அதற்கு தெற்கே ஈழம் சென்றுவிட்டார்
இன்றும் கவனியுங்கள் தெற்கே இருந்து ஒரு அமைச்சர் கிடையாது, நல்ல தலைவர் கிடையாது. உருவாக விடமாட்டார்கள்
திமுகவோ அதிமுகவோ நெல்லை பக்கம் காங்கிரஸ் வாக்கு வங்கி உண்டு என்பதால் முக்கிய அமைச்சர் பதவியினை வழங்கவே மாட்டார்கள்
இன்றும் நெல்லை பக்கம் இருந்து கோட்டையில் அமைச்சராக இருப்பவர்கள், முக்கிய கட்சி அரசு பதவியில் இருப்பவர்கள் யாருமில்லை
இதனால் நெல்லை பகுதியில் நல்ல தலைவன் உருவாகவில்லை, அப்படி உருவாக தொடங்கினால் சாதி முதல் மதம் வரை இழுத்துவிட்டு முடக்க பல வாய்ப்பும் உண்டு, இது நெல்லை பகுதி சாபம்
ஆனால் பெரும் தொழிலதிபர்கள் வளர்ந்தார்கள், அவர்கள் அரசை கவனித்தார்கள், அரசு அவர்களை கவனித்தது அவர்கள் மறுபடி தேர்தல் செலவு கட்சிசெலவு என பார்த்துகொண்டார்கள்
மக்களுக்கு ஒன்றுமில்லை, கேட்க நாதியற்ற இடத்தில் பேரழிவினை கொண்டுவரும் பல விஷயங்கள் வந்தன
ஒரே மாவட்டத்தில் அணுவுலை, கடற்படை தளம் மற்றும் வான்வெளி எரிபொருள் நிலையம் எல்லாம் வந்து விடிந்தது இப்படித்தான்
தாமிரபரணி அழிந்துகொண்டிருப்பதும் இப்படித்தான்
நிச்சயம் இதற்கு பெரும் எதிர்ப்பு வந்திருக்க வேண்டும், மக்களும் சிந்திக்கவில்லை , சிந்தித்தாலும் அவர்களை வழி நடத்த யாருமில்லை.
வறண்ட ராதாபுரம் பகுதிக்கு மேற்கிலிருந்து நீர்கொண்டுவந்து செழிக்க வைக்க யாருமில்லை, காமராஜருக்கு திட்டமிருந்தது அதன்பின் அவருக்கு அவகாசமில்லை
அதன்பின் மேற்குதொடர்ச்சி நீர்வந்து செழிக்க வேண்டிய பகுதி எல்லாம் அபாய திட்டத்தால் பெரும் எதிர்கால சிக்கலுக்குள் இருக்கின்றது
ஒரு நல்ல தலைவன் உருவாகி வரும் பட்சத்தில் அவன் பின்னால் தென் தமிழகம் நடைபோடும் பட்சத்தில் ஸ்டெர்லைட் மூடபடும், நம்பியாறு மீண்டுவரும்
சைமனின் ஆமைகதை பிராடு சந்தேகமில்லை, ஆனல் சைமன் பொய் சொல்கின்றார் என ஒப்பாரி வைக்கும் கோப்பால் சாமி இன்னும் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என பெரும் பொய்யினை அவிழ்த்துவிடுகின்றார்
ஆக இரண்டுமே பக்கா பிராடு. இரண்டுமே ஓட விரட்டபடவேண்டிய வகையறா