நம்மாழ்வார் என்ன போதித்தார்?
பிளாஸ்டிக் அரிசி சர்ச்சையில் நம்மாழ்வாரையும் சிலர் இழுத்து பேசுவதுதான் மிக பெரும் கொடுமை
பிளாஸ்டிக் அரிசி நடப்பில் இல்லாவிட்டால் நல்லது, வதந்தி எனில் அது வந்த மூலத்தை தேடலாம், பிளாஸ்டிக் அரிசியினை எக்காலமும் இங்கு கொண்டுவரும்படி விழிப்பாய் இருக்கலாம், அது ஒன்றும் தவறில்லை
நம்மாழ்வார் என்ன போதித்தார்?
அன்றைய பயித்தொழில் இயற்கை சார்ந்திருந்தது, மனித குலம் பெருக பெருக வயல்களும், விளைநிலங்களும் பெருகின, அதாவது இயற்கை இவ்வளவுதான் விளைவிக்க முடியும் என்ற உச்சவரம்பு உண்டு, அதனை மீறி மானிட தேவை பெருகிய பொழுது வயல்களையும் பெருக்கும் தேவை இருந்தது, பெருக்கிகொண்டே இருந்தார்கள்
இது விஜயநகர மன்னர்கள் தமிழகத்தை ஆளும் வரை தொடர்ந்தது, பின்பு வெள்ளையன் வந்து இந்திய விவசாய சயசார்பினை தன் நலம் சார்ந்த வியாராமாக்கியபொழுது சிக்கல் வந்தது, விவசாயம் சரிய தொடங்கியது
உலகபோரினை தொடர்ந்து வந்த பஞ்சத்தில் உணவு தேவை அதிகரித்தது, புதிய வயல்களை உருவாக்க நேரமில்லை மாறாக இருக்கும் வயல்களில் அதிகபடியான விளைச்சல் வேண்டி ரசயாணம், ஒட்டுமுறை,பூச்சி கொல்லி விஷம் என உலகம் தலைதெரிக்க நின்றது
அதில் வெற்றியும் பெற்றது, மிக குறைந்த வயல்களிலே பெருவிளைச்சல் பெற்றார்கள், எல்லோரும் ரசாயண விவசாயமானோம், நிலம் செத்துகொண்டிருந்தது, பயிர்கள் விஷமேறி நின்றன
உணவு நஞ்சானது, அதுவரை இல்லா புது புதுநோயகள் மானிட இனத்தை தாக்கின, உலகம் விழித்தது அப்பொழுதுதான்
உணவு நஞ்சானதை கண்டுகொண்ட மேல்நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கைக்கு மாறின, அப்படி மாறுவதுதான் அறிவுடமை. ஆனால் ரசாயண நஞ்சுகளை அடுத்த்நாட்டில் அவை தடுக்கவில்லை, உரம், பூச்சிகொல்லி என பெரு பணம் புரளும் தொழில் என்பதால் இழக்க விரும்பவில்லை
இதனை எல்லாம் ஆர ஆய்ந்த நம்மாழ்வார், அதன் பின் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை, மேல்நாடுகளின் வியாபார நோக்கத்தை உணர்ந்துதான் இயற்கை விவசாய வகுப்பெடுக்க ஆரம்பித்தார்
நான் அவரையும் அதோடு உலகத்தையும் அதன் உணவு மாறுதலையும் கண்காணித்தபொழுது, நம்மாழ்வாரின் போராட்டத்தில் உண்மை இருப்பதை அறியமுடிந்தது
நம் பழங்கால விவசாய முறையினை அவர் மீட்டெடுத்தார், இயற்கை நிலங்கள் உயிர்பெற்றன, நம் கண்முன்னால் நாம் கண்ட பெரும் இயற்கை சித்தர் அவர்தான், அவரின் பெரும் கேள்விகளுக்கு விஞ்ஞான பண்டிதர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை.
ரசாயண உரம், பூச்சிகொல்லி எல்லாம் ஒரு இக்கட்டான நிலையில் இந்த மானிடம் எடுத்துவிட்ட மெதுவிஷம், அதிலிருந்து வெளிவராமல் மனிதன் நோயின்றி வாழமுடியாது என சொன்னவர்தான் நம்மாழ்வார்
நம்மாழ்வாரின் வழி இன்றல்லாவிட்டாலும் இன்னொருநாள் ஏற்கபட்டே தீரும் , அவர் நமக்கெல்லாம் முன்னறிவித்தவர் அவ்வளவுதான் விஷயம்,
இப்பொழுது பிளாஸ்டிக் அரிசி பிரச்சினை வந்திருக்கின்றது, அது விவாதிக்கபடும் பொழுது சத்தமின்றி மரபணு மாற்றபட்ட பயிர்கள் அறிமுகமாகின்றன எனும் சர்ச்சை வருகின்றது
ரசயாண உரம், பூச்சிகொல்லி எல்லாம் பயிர்களை நஞ்சாக்கும், உண்ணும் நம் உடலும் விஷமாகும், ரசாயணத்தை பூச்சிகொல்லியினை தடுத்தால் பிரச்சினை தீர்ந்தது
ஆனால் மரபணு என்பது கடவுளின் படைப்போடு விளையாடும் விளையாட்டு, கத்தரிக்காயின் மரபணுவில் விலங்குகளின் மரபணுவினை கலந்துவிட்டால் கத்தரி பெரிதாக, பூச்சி தாக்காமல் வரும்
ஆனால் அதன் இயல்பு போய்விடும், இன்று மருத்துவ உலகம் விட்டமின்கள் என சொல்லபடும் அதன் இயல்பான பல விஷயங்கள் மாறிவிடும், அது மனித உடலுக்கு பெரும் ஆபத்து.
அதோடு மகா முக்கியம் அதன் விதை முளைக்காது, நம் வீட்டில் கத்தரிக்காய் விளைந்தாலும், அடுத்த விதைக்கு நாம் வெளிநாட்டு கம்பெனிகளைத்தான் நாடவேண்டும்
இப்படி எல்லா காய்கறிகளிலும் மரபணு புகுந்துவிட்டால் உலகில் எல்லாமே மாறும், ஒரு கட்டத்தில் எது உண்மை, எது போலி என தெரியாமல் பெரும் குழப்பம் உருவாகி என்னவெல்லாமோ நடக்கும், மறுபடி மனிதனால் முடியாது கடவுள்தான் படைக்க தொடங்க வேண்டும்
இந்த பிளாஸ்டிக் சர்ச்சையில் மரபணுமாற்றபட்ட கடுகுக்கு இந்திய சந்தையில் அனுமதிகொடுக்கபட்ட விவகாரம் மறைக்கபட்டது, உண்மையில் அதுதான் பெரும் ஆபத்து
கடுகினை பயன்படுத்தும் நாடுகளில் முக்கியமானது இந்தியா, தாளிக்காமல் நமக்கு குழம்பே இல்லை. அதில்தான் கை வைத்திருக்கின்றார்கள்
இன்னும் ஒவ்வொன்றாக மாற்றுவார்கள்
வெளிநாடுகளின் சந்தைக்கு வரும் பொருளில் இந்த ரசாயண, மரபணு விவகாரங்களை எளிதில் கண்டுபிடிக்குமளவிற்கு அரசுகள் உஷாராக இருக்கின்றன
மேல்நாட்டவர்கள் அவர்கள் நாட்டில் இயற்கை வேளான்மையினை வைத்து கொண்டு, ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் ரசாயண விவசாயத்தை தொழிலாக கொண்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து காசுபார்க்கின்றன
அதாவது இன்றைய தேதியில் நம்மாழ்வார் காட்டிய இயற்கை விவசாயத்திற்கு மேல்நாட்டவர் என்றோ திரும்பியாயிற்று, அவர்கள் அப்படிபட்ட சில பொருளை ஏற்றுமதியும் செய்கின்றனர் அது விலை மிக அதிகம்
நல்ல இயற்கை தேங்காய் எண்ணெய் லிட்டருக்கு 1000 ரூபாய் வரை விலை, அரிசியோ, பழங்களோ விலை மகா உச்சம்.
அதனால் இருப்பவர்கள் அதனை வாங்குங்கள், இல்லாதோர் இந்த விஷங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என எல்ல நாடுகளும் அவற்றில் சில அடையாளம் இடுகின்றன
பார்கோட் எனப்படும் கோட்டின் கீழ்வரும் எண் 4ல் தொடங்கினால் அது ரசாயணம் கலந்த ஆப்பிள், 5ல் தொடங்கினால் அது மரபணு மாற்றபட்ட ஆப்பிள், 9ல் தொடங்கினால் அது இயற்கை முறையில் விளைந்தது என பொருள்
எங்காவது 9ல் வரும் இயற்கை ஆப்பிளை பார்க்கமுடியுமா என்றால் வெகு அபூர்வம்
வெளிநாடுகள் அப்படித்தான் அடையாளபடுத்துகின்றன, இந்தியாவில் இப்படி ஏதும் உண்டா என தெரியவில்லை.
நம்மாழ்வாரை எதிர்ப்பவர்களை நாம் கேட்கும் கேள்வி இதுதான், ரசாயண, மரபணு மாற்றம் பிரச்சினை இல்லை எனில் ஏன் அவர்கள் இப்படி பிரித்து வைத்திருக்கின்றார்கள்???
அது ஆபத்து என இல்லாவிட்டால் ஒன்றாக கலந்து வைத்தால் என்ன? வெளிநாடுகளின் ஒவ்வொரு கடையிலும் இந்த பாகுபாடு உண்டு, அந்த விழிப்பு உண்டு ஏன்?
பிளாஸ்டிக் அரிசி வராவிட்டால் நல்லது, மரபணு பயிர்கள் வந்தால் எதிர்க்கலாம் அதனை விட்டு நம்மாழ்வார் நம்மை ஏமாற்ற முனைந்தார் என்பதெல்லாம் காமராஜர் நம்மை ஏமாற்றினார் என சொல்வது போன்றது
விவசாயத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டோம், நல்ல ஆரோக்கியமான உணவு இப்பொழுது சாத்தியமில்லை, பெருகி விட்ட சம்பளம் அந்த தரமற்ற உணவால் மருத்துவமனைக்குத்தான் செல்லும், செல்கின்றது
இன்னும் தரமான உணவுபொருளின் விலை எங்கோ உச்சத்தில் இருக்கின்றது, ஐடி பணியாளர் சம்பளத்திலும் வாங்கமுடியாத விலை அது, ஆனால் அதனை உண்டால்தான் மருந்தின்றி உயிர்வாழ முடியும்
இந்த வாழ்வு மிக மிக மாறிவிட்டது, 200 வருடத்திற்கு முன்பு வரை காபி, டீ , மைலோ என ஒன்றும் கிடையாது, சீனி கிடையாது, ,பரோட்டா கிடையாது, சப்பாத்தி தெற்கே கிடையாது, நோயின்றி வாழ்ந்தார்கள்
இன்று அவையும் வந்து, ரசாயாண உணவும், மரபணு மாற்ற உணவும் வந்து எல்லாம் நாசமாயிற்று
இந்த உலகில் வாழ்வதற்கான வழிகள் மாறலாம், உணவு மாற கூடாது
சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான், உப்பு வியாபாரியினை காணவில்லை, தெருவில் கீரை விற்றவனை காணவில்லை நம்மை எவ்வளவு அழித்தார்கள்? என ஒப்பாரி
அட பரிதாபமே, தெருவில் அம்மி கொத்த வந்தவனை, குடை ரிப்பேர் செய்தவனையும் காணவில்லை, அதனை பற்றி கேட்டால் பதில் சொல்ல யாருமில்லை
காலமாற்றம் என்பது வேறு, உணவு மாறி மக்கள் நாசமாக போவது என்பது வேறு
இரண்டாம் விஷயத்தைத்தான் நம்மாழ்வார் மாற்ற நினைத்த்தார், உலக நாடுகள் விழித்துகொண்டது போல நம்மையும் விழித்துகொள்ள சொன்னார்
விழிக்காவிட்டாலும் பரவாயில்லை அவரை பழிக்க வேண்டாம்
இயற்கை விளைபொருளின் அவசியம் ஒருநாள் எல்லோருக்கும் புரியவரும், அதன் விலை வாங்கும் சம்பளத்தை விட மகா உச்சத்தில் இருக்கும்
அதனால் இயற்கை விவசாயம் தேடி தமிழர் திரும்ப ஒரு காலம் வரும், அன்று நம்மாழ்வார் எல்லோர் சிந்தனையிலும் வருவார்
இந்த திடீர் விஞ்ஞானிகளுக்கு எல்லாம் பின்னொரு நாளில் காலம் மூலம் நம்மாழ்வார் பதில் சொல்வார்…
தூற்றுபவர்கள் தூற்றட்டும், எம்மை பொறுத்தவரை அவர் தமிழகத்தில் வாழ்ந்த இயற்கை சித்தர், அவர் போதனை பூமியுள்ள காலம் வரை கட்டாயம் தேவை.
சமூகத்தை திருத்தி எளிய மக்களை வாழவைக்க முனைந்த தாடி பெரியார் போல, அறியாமை விவசாயிகளுக்கு இயற்கை வேளான்மை அறிவை கொடுக்க வந்த இன்னொரு பெரியார்தான் நம்மாழ்வார்..