நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும்…..
ஊரெல்லாம் நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும் வீட்டுக்குள்ள்ளே நயனுக்கு ஆதரவு பெருகிற்று
மகள் நயனின் தீவிர ரசிகையாகிவிட்டார், தலைவி பற்றி எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறெடுத்து பார்ப்பதில்லை
விவரமறியாத சிறுமி என்பது சரியாகத்தான் இருக்கின்றது
இந்த விஷயம் Babu Rao என்பவருக்கும் Chandran Kannanஎன்பவருக்கும் தெரியாமல் போககடவது என அந்தோணியாருக்கு ஆட்டுகிடா நேர்ந்திருகின்றேன்
ஏதோ ஒரு பாடலில் அவ்வையார் சொல்வார், நாளுக்கு ஒரு தேர் செய்யும் தச்சன், வாரமுழுக்க இருந்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்து.. என ஒரு தேரின் வலுவினை சொல்வார்
அப்படியாக இந்த அழகிய தேரினை படைக்க அந்த பிரம்மனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கலாம்
இல்லை ஒரு யுகமும் ஆகியிருக்கலாம்