நல்ல பிள்ளையாக போய் சிறையில் அமர்ந்துவிட்டார் சசிகலா
15 நாள் பரோலில் வந்த சசிகலா , பரோல் முடியும் முன்பே நல்ல பிள்ளையாக போய் சிறையில் அமர்ந்துவிட்டார்
ஒரு வழக்கினையே சட்டத்தை மதிக்காமல் 18 வருடம் இழுத்தடித்த சசிகலாவா இவர் என தமிழகம் மகா ஆச்சரியமாய் பார்க்கின்றது
நடராஜன் பெயரிலுள்ள சொத்து தகறாறு, தன் வீட்டு அதிகார தகறாறு எல்லாம் சேர்த்து சசிகலாவினை இந்த அளவு வெறுப்புக்குள்ளாக்கிற்று என பத்திரிகைகள் எழுதியது உண்மையாயிற்று
இதற்கு இரண்டே வாய்ப்புகள்தான் உண்டு
முதலாவது எல்லாம் தன் கைவிட்டு போயிருப்பதை கண்டு மனம் வெதும்பிய சசிகலா, கணவனும் ஜெயாவும் இல்லா நிலையில் போராட விரும்பாமல் முதுகில் வாங்கிய குத்துடன் சோகமாக சிறை சென்றிருக்கலாம்
இல்லை சசிகலாவினை ஏதோ ஒரு சக்தி மிரட்டி இருக்கலாம், ஓழுங்காக போய் சிறையில் அமரவும் என அது கட்டளை இட்டிருக்கலாம்
இரண்டில் ஒன்று அல்லது இரண்டுமே நடந்திருக்க வாய்ப்பு உண்டு
ஏற்கனவே சிறையில் ஜெயாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சாமியாராகிவிட்டாராம்
இனி சசிகலா சாமியாரானும் ஆச்சரியபடுவதற்கில்லை, முன்பு திரண்ட சொத்து பட்டினத்தார் என்பவரையே சாமியார் ஆக்கிவிட்டதாம்
மோடி ஆட்சி இருக்குமட்டும் சாமியாராய் இருந்தால் பாதுகாப்பு என்பது இன்னொரு விஷயம்
விரைவில் “அம்மா சசிகலாமாயி”, “ஞானபூதி சசிகலா அம்மையார்” “அருட்சகோதரி சசிகலா” என அடைமொழிக்கு மாறினாலும் மாறலாம்