நல்ல மனைவி – தயாளு அம்மாள்
இந்த பிரேமலதாவின் ஆணவ பேட்டியினை இப்பொழுதுதான் காண முடிந்தது
இந்த தயாளு அம்மாள் இருக்குமிடம் நோக்கி கைகூப்பி வணங்க தோன்றுகின்றது
தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் இல்லாத வரலாறு தயாளு அம்மாளுக்கு உண்டு
1950களில் இருந்து அவர் கையால் உண்ணாத அரசியல் தலைமுறை தலைவர்கள் யாரும் இதுகாலம் வரை இல்லை,
கலைஞரின் அருகிருந்தே அவரை காத்தவர் அவர், அவருக்கு வேராக இருந்தவர்
ஏன் முக ஸ்டாலினே தயாளு அம்மாள் அனுபவம் முன் நிற்க முடியாது.
பெரியார் காலம் முதல் இன்றைய ராகுல்காந்திவரை எவ்வளவு தலைவர்களை பார்த்தவர் அவர்
என்றாவது ஏதும் ஒருவார்த்தை பேசி பார்த்திருப்போமா?
நல்ல மனைவி கடவுளால் தரப்படுவார் என்பார்கள், கலைஞருக்கு அந்த கடாட்சம் நிரம்ப இருந்திருக்கின்றது.
நடக்கும் காட்சிகளை கண்டால் தயாளு அம்மா காலில் விழுந்தும் வணங்கலாம், அதில் தவறே இல்லை
தெய்வம் தன் அருகில் இருந்ததால் என்னமோ கலைஞர் கடவுளை தேடி ஆலயம் செல்லவே இல்லை போலிருக்கின்றது
