நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள்
இந்ந நவம்பர் 22ம் தேதி மறக்கமுடியாத நாள், இத்தேசம் 1962ல் சீனாவிடம் தோற்று பணிந்த நாள்
1962 அகோடபரில் தொடங்கிய சண்டை, நவம்பர் 21 நள்ளிரவில் முடிந்து, இந்தியா தோல்வி என்ற செய்தியுடன் நவம்பர் 22ல் முடிந்தது
எப்படி தோற்றோம்?
முதலாவது விஷயம் நேரு வைத்திருந்த நம்பிக்கை, மாவோவின் சீனா இந்தியா மீது பாய சோவியத் யூனியன் அனுமதிக்காது, உலக யதார்த்தபடி இங்கொரு யுத்தம் வராது என நம்பிகொண்டிருந்தார்
அதில் உண்மையும் இருந்தது, மாவோ எனும் நரி மிக தந்திரமாக ஆடியது. அது சாதாரண நேரம் என்றால் நேரு நினைத்தது நடந்திருக்கும் ஆனால் அது சோவியதும் அமெரிக்காவும் கியூபாவில் முறுக்கிகொண்டிருந்த நேரம். அந்நேரம் உலக கவனம் முழுக்க அதில் இருந்ததால் மாவோ முந்திகொண்டார்
சீனபடைகள் நம் பகுதிகளை ஆக்கிரமிக்க முதல் காரணம் உளவுபடைகளின் தோல்வி, கார்கிலில் சறுக்கியது போலத்தான் அன்றும் சறுக்கியிருந்தோம்
இரண்டாம் காரணம் உண்மை நிலையினை சொல்லாமல் மறைத்த கிருஷ்ணமேனன். நேருவுக்கு அவர்மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்தது, ஆனால் கிருஷ்ணமேனனோ அதிகார உச்சத்தில் இருந்தார். அத்தோடு கூட கவுல் என்பவரை நியமித்து போரை நடத்தினார்
கரியப்பா, திம்மையா போன்ற வீரமிக்க தளபதிகள் இதனை கண்டித்தனர், திம்மையா நேராக நேருவினையே சந்தித்து ராஜினாமா செய்வதாக கூறினார், ஆனால் நேரு சமாதனபடுத்தினார், அப்பொழுதும் நேரு திருந்தியதாக தெரியவில்லை
போரை நடத்திய கவுல் என்பவர் காயம்பட்டு டெல்லிக்கு கொண்டுவரபட்டபின்னும் நான் தான் போரை நடத்துவேன் என அடம்பிடித்தார்
இப்படி பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன, இந்தியதரப்பில் ஏற்பட்ட இந்த சறுக்கலால் சீனபடைகள் வெற்றிமுகம் காட்டின அருணாசல பிரதேசத்தின் தவாங் புத்தமத கோவிலை கைபற்ற குறிவைத்து நகர்ந்தன சீனபடை
வேறுவழி தெரியாத நேரு தவித்தார், சோவியத்தோ சீனா தம்பி இந்தியா நண்பன் என சொல்லிவிட்டது
அதற்குபின்புதான் நேரு கென்னடியின் உதவியினை நாடினார், அமெரிக்க விமானங்கள் ரகசிய உதவிபொருட்களை அளித்தன
அமெரிக்க செனட்டர் குழு டெல்லிக்கு வந்து அப்போதைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது, அவரின் பதில்கள் அமெரிக்கர்களுக்கு குழப்பத்தையே கொடுத்தன. அந்த அளவு கிருஷ்ணமேனன் நேருவினை குழப்பி, நேரு ராதாகிருஷ்ணனை குழப்பியிருந்தார்
கிருஷ்ணமேனமும், கவுலும் பெரும் மக்கள் வெறுப்புக்கு ஆளாயினர், நிலமை சிக்கலானது.
ஆயினும் அமெரிக்க தலையீடு வந்தபின் நிலமை மாறியது, முழு அருணாசலபிரதேசத்தையும் தூக்கவேண்டும் என்ற மாவோவின் கனவில் மண் விழுந்தது, ஆயினும் ஆக்கிரமிக்கபட்ட பகுதிகளில் இருந்து முழுவதும் விலகாமலே யுத்தம் நின்றது
இந்த போருக்கு பின்னரே நேருவுக்கு சில உண்மைகள் விளங்கியது, “: “நாங்கள் நவீன உலகின் உண்மையில் இருந்து விலகி இருந்தோம், நாங்களே உருவாக்கிய ஒரு செயற்கையான சூழலில் இருந்தோம்.” என உண்மையினை ஒப்புகொண்டார்
ஐநா சபையில் ஒரே ஆசிய நாடான சீனா பாதுகாப்பு சபையில் இடம்பெற உழைத்தவர் நேரு, ஆனால் மாவோவிற்கு அந்த நன்றி எல்லாம் இல்லை
இந்தபோர் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது, சீனா இனி நண்பன் இல்லை, பாகிஸ்தானுக்கு சீனா உதவலாம், சோவியத் என்பதும் முழுக்க நம்ப கூடிய நாடு அல்ல
இந்தியா என்பது அதன் சொந்தகாலில் நின்றாகவேண்டிய தேசம் என்றேல்லாம் பொட்டில் அடித்து சொன்ன விஷயங்கள் இவை
இந்த சீனப்போரில் ஒரு இயக்கம் ஸ்கோர் செய்தது என்றால் அது ஆர்.எஸ்.எஸ் இயக்கமே. காந்திகொலை எனும் பெரும் கறை படிந்த இயக்கம் சீனபோரில் இந்திய வீரர்களுக்கும், அகதிகளுக்கும் உதவுகின்றோம் என களமிறங்கி நின்றது
வேறுவழியின்றி நேருவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
இந்த சம்பவங்கள் எல்லாம் நேருவின் மனதை பாதித்தன, அதன் பின் உற்சாகமான நேரு இல்லை, அப்படியே நோயில் வீழ்ந்து அவர் இறந்தும் போனார்
அதன் பின் சாஸ்திரி வந்தார், இப்பொழுது அடித்தால் இந்தியாவினை வெல்லலாம் என்ற கணக்கிட்ட பாகிஸ்தானை ஓட விரட்டியது இந்தியபடை, காரணம் அப்பொழுது கிருஷ்ணமேனன், கவுல் என்பவர்கள் எல்லாம் களத்தில் இல்லை
இச்சம்பவங்களை ஒன்றுவிடாமல் மனதில் இருத்தி, வைராக்கியமாக வந்தவர்தான் இந்திரா
தன் தகப்பன் விட்ட தவறுகளை எல்லாம் இந்திரா சரிசெய்தார். எதில் எல்லாம் நேரு சறுக்கினாரோ அதில் எல்லாம் இந்திரா மின்னினார்
பலமான உளவுபடை, பலமான ராணுவம் என புதிய இந்தியா பிறந்தது, அடுத்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தானை பிளந்து போட்டது இந்தியா
அதன் பின் அணுகுண்டும் வெடித்து இனி மோதிப்பார் என சீனாவிற்கு சவால்விட்டது
இந்த நவம்பர் 22 இத்தேசத்தின் வடு பதிந்தநாள். இனி ஒருபோதும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவிடமாட்டோம் என இந்தியா உறுதி எடுத்துகொண்ட நாள்
அப்படி ஒருநாள் இனி வராது, வருவதற்கு எந்த இந்தியனும் விடபோவதில்லை
வந்தே மாதரம்