நாகரீகம் அறிந்த இஸ்லாமியர் பெருவாரி இருக்கின்றார்கள்
திமுக காங்கிரஸில் இருக்கும் நல்ல இஸ்லாமியர், நற்குணம் படைத்தோர் கொஞ்சமேனும் நியாய தர்மம் அறிந்த இஸ்லாமியர் நெல்லை கண்ணனையோ அவரோடு கைதட்டிய அந்த கூட்டத்தை கண்டிக்கின்றனர்
நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவரை கண்டிக்காத அந்த கூட்டம் நடத்திய கோஷ்டியினை கண்டிக்கின்றார்கள்
அந்த நேர்மையினை நாம் வாழ்த்துகின்றோம்
ஆனால் வீம்புக்கு கண்ணனுக்கு முட்டுகொடுக்கும் சில பதர்களை பார்த்தால் பரிதாமமே மிஞ்சுகின்றது
இந்நாட்டில் நாட்டு நலம் அறிந்த, சமூக அமைதி அறிந்த, நாகரீகம் அறிந்த இஸ்லாமியர் பெருவாரி இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி, இது நமது தேசம் என உணரும் அவர்களை வாழ்த்துகின்றோம்