நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி

சேலம்-சென்னை ரெயில் கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி

ரயில் கொள்ளையினை துப்பு துலக்க நாசாவின் படங்களும் அவர்களின் தகவல்களும் உதவி இருக்கின்றன‌

எவ்வளவு திறமையானது நாசா என நகர்ந்து செல்லும் விஷயம் அல்ல இது, மாறாக இப்படி எல்லாம் இந்தியாவினை கண்காணிக்கின்றார்களா? என அதிர்ச்சி அடைய வேண்டிய விஷயம்

சாதாரண ரயிலையே அவர்களால் இப்படி துல்லியமாக பார்த்து தகவல் சொல்லமுடிகின்றது என்றால், இந்திய ராணுவத்தை எப்படி எல்லாம் உளவு பார்த்திருப்பார்கள்?

இது நமக்கே புரியும் பொழுது இந்திய ராணுவத்திற்கு புரியாதா? அவர்களும் செய்ய வேண்டியதை செய்திருப்பார்கள்

ஆக நாசா இப்பொழுது இந்திய வழக்குகளில் சாட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டது.

இப்படி நாசாவிடம் கேட்டு அந்த ராமஜெயம் கொலைவழக்கினையும் துப்புதுலக்கினால் நன்றாகத்தான் இருக்கும்


தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை- அமைச்சர் விஜயபாஸ்கர்

அதை எல்லாம் மத்திய அரசு எப்பொழுதோ தொடங்கியாயிற்று, முடிந்தால் பன்னீர்செல்வத்திடம் விசாரிக்கவும்