நாஞ்சில் சம்பத் இப்பொழுது திமுகவிற்கே தேவை

Image may contain: 1 person, smiling

அரசியலில் நண்பரும் பகைவரும் நிரந்தமாக இருந்ததே இல்லை

இப்பொழுது திமுகவிற்கு தேவை சவுண்ட் பார்ட்டியே தவிர மனுஷ்யபுத்திரன் போல எரிச்சல்கள் அல்ல‌

நாஞ்சில் சம்பத் மேல் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் இறுதிவரை அவர் திராவிட குரலே பேசிகொண்டிருந்தார் என்பதனை மறுக்க்க முடியாது

அவரின் உலகளாவிய அறிவும், இலக்கியம் , சொல்லாற்றலும் சாதாரணம் அல்ல. அவர் மீது சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் பல திறமைகள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது

இலக்கியம் முதல் அரசியல்வரை அவர் எல்லா திசையிலும் விரித்த சிறகுகள் மிக பெரியவை.

வைகோவுடன் சென்ற எல் கணேசன் முதல் கண்ணப்பன் சபாபதி மோகன் என எல்லோரையும் ஏற்றவர்கள், வைகோவினையே ஏற்றவர்கள் நாஞ்சில் சம்பத்தை ஏன் விட்டுவைக்க வேண்டும்?

அழைத்து அருகில் வைத்து ஆர்.கே நகரில் தினகரன் வென்ற கதையினை நாஞ்சில் சம்பத் விளக்குவார் என திமுக மேலிடம் சொன்னால் எப்படி இருக்கும்?

கலைஞர் நலமாக‌ இருந்திருந்தால் “இம்மரத்து பறவை ஒன்று திசைமாறி பிரிந்து சென்று பொல்லோர் நடுவே அமர்ந்தது

வல்லூறு கூட்டத்தில் நல்லோர் அமர முடியுமா?, முள்மரத்திலே அது சுகம் காணல் நடக்குமா?

ரத்தம் சிந்த, கிழிந்த சிறகோடு வந்திருக்கும் இக்கூட்டு பறவையினை அதன் காயத்தை துடைத்து, புண்ணுக்கு மருந்திட்டு கழகம் அணைத்துகொண்டது” என அரவணைத்திருப்பார்

நாஞ்சில் சம்பத் இப்பொழுது திமுகவிற்கே தேவை, அவரை அழைத்து அணைத்துகொள்ளலாம் ஒன்றும் சிக்கல் இல்லை.

மிக சிறந்த பேச்சாளர், அரசியல் அனுபவமும் பல களங்களும் கண்ட ஒருவர் ஆதரவன்றி நிற்கும்பொழுது பிடித்து அருகே வைத்துகொள்வதே திமுகவிற்கு நல்லது.