நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…
மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தவர்களை, குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி எல்லாம் பெரும் பொருளாதார வித்வான்கள் போல குதித்தவர்களை எல்லாம் இப்பொழுது ரூபாய் சரிவில் காணவில்லை
பொருளாதார நோக்கில் அது ஜிஎஸ்டி கொண்டு வரபட்டபொழுது தமிழக டிவிக்களில் பல குபீர் பொருளாதார நிபுணர்கள் தோன்றினார்கள்
ஜிஎஸ்டி என்றால் புலிகளின் அரிசி கப்பல் போல என நினைத்துகொண்ட அங்கிள் சைமன் எல்லாம் சில டிவியில் வந்து குதித்த கொடுமை நடந்தது
சாலையில் தூங்குபவன், பார்க் பெஞ்சில் மல்லாக்க கிடப்பவன், ஓசி டீக்கு ஏங்கி நிற்பவன் எல்லாம் தமிழக டிவிக்களில் வந்து பொருளாதார பாடம் நடத்தினார்கள்
இதோ இந்திய ரூபாய் சரிகின்றது, பெரும் சிக்கலை நாடு எதிர்கொள்கின்றது
ஒரு டிவியாவது நல்ல நிபுணர்களை அழைத்து எப்படி சரி செய்யலாம் என விவாதம் நடத்துமா என்றால் இல்லை
சரி ஜிஎஸ்டியில் குதித்த குபீர் கோஷ்டிகளாவது வந்து டாலர் பற்றி பேசுமா என்றால், “டாலர்னா பழனியில் கிடைக்குமே அதுவா சரிந்தது? ” என்ற அளவில் அவர்கள் அறிவு இருகின்றது
நல்ல மீடியாக்கள் நிபுணர்களை அழைத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என விவாதித்து ஆலோசனைகளை மக்களுக்கு சொன்னால் வாழ்த்தலாம், அவர்கள் கடமையும் அதுதான்.
நாட்டுக்கு என்ன தேவையோ அதை ஒரு மீடியாவும் செய்வதில்லை மாறாக எதில் குழப்ப முடியுமோ அதை வைத்து நாட்டின் அமைதியினை மகா நன்றாக குழப்புகின்றார்கள்
நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…
இனி எந்த டிவியாவது அந்த வரி சரி இல்லை, இந்த முறை சரி இல்லை , இதனை இப்படி விற்க வேண்டும் என்றெல்லாம் யாராவது அல்லக்கை சும்மா பேசிகொண்டிருப்பதை ஒளிபரப்பினால், அந்த டிவி நிலையத்தை நொறுக்க வேண்டும்