நாடு முழுக்க சுற்றிவரும் ராம ரதம் தமிழகத்திற்கும் வந்தாயிற்று

நாடு முழுக்க சுற்றிவரும் ராம ரதம் தமிழகத்திற்கும் வந்தாயிற்று : செய்தி

உ.பியில் பாஜக தோல்வி தெரிந்தபின் அடுத்து அவர்களின் செல்வாக்கை உயர்த்த நிச்சயம் ராமர் கோவில் பக்கம் வருவார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம்.


இங்கு சாதி சங்க ஊர்வலம் நடத்தலாம், இயேசு அழைகின்றார் மாநாடு நடத்தலாம்

ஷிர்க் ஒழிப்பு என இஸ்லாமியர்கள் பெரும் மாநாடு எல்லாம் நடத்தலாம் , விநாயக சதுர்திக்கு ஊர்வலம் செல்லலாம்.

திருமா சீறலாம், ராமதாஸ் பொங்கலாம் பேரணி நடத்தலாம்

மாதம் ஒரு மாநாட்டையும் பேரணியினையும் கட்சிகள் நடத்தலாம்

ஆனால் ரத யாத்திரை மட்டும் நடக்க கூடாதாம், எதிர்ப்பார்களாம்

என்ன நியாயமோ தெரியவில்லை.


தமிழகத்தில் மட்டும் பிராமணர்களுக்கு மரியாதை இல்லை : எஸ்.வீ சேகர் வேதனை

இங்கு மதிப்பு பெற்ற எத்தனையோ பிராமணர்கள் உண்டு, ஜெயலலிதா முதல் சுஜாதா வரை ஏராளமான பெயரை அடுக்கலாம்.

மதிக்கபடாத பிராமணர்கள் யாரென்றால் எஸ்.வி சேகர், எச்.ராசா போன்ற வகையாறாகள், காரணம் என்ன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக எஸ்.வி சேகர் என்ன சொல்லவேண்டும்?

என்னையும் எச்.ராசாவினையும் தவிர எல்லா பிராமணர்களும் மதிக்கபடுகின்றார்கள் என சொல்லியிருக்க வேண்டாமா?


சில பரதேசி சாமியார்கள், ஆண்டி பண்டாரங்களின் ஊர்வலம் கண்டுகொள்ளபடாமல் விட்டிருந்தால் அது போக்கில் சென்றிருக்கும்

உண்மையில் அப்படி ஒரு ரதம் கிளம்பியிருப்பதே யாருக்கும் தெரியாது

அதை மறிக்க்கின்றேன் பேர்வழி என கிளம்பி விஷயத்தை பெரிதாக்கி ரதத்திற்கு சிறந்த வரவேற்பை கொடுத்தாயிற்று

சில விவகாரங்களில் விவேகம் முக்கியம்,

கண்டுகொள்ளாமல் விட்டால் கவனமே பெறாத விஷயத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்


 

ராம ரதத்தை எதிர்த்து முக ஸ்டாலின் மறியல், கனிமொழி சீற்றம்

ஆக பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிகாத்த திராவிட கொள்கையினை ஒரு ரதம் அசைத்து பார்கின்றதா?

ஒரு ரதத்திற்கு திராவிட பூமி அஞ்சலாமா? இது நம்மை என்ன செய்துவிடும் என்ற பகுத்தறிவு வேண்டாமா?

ராம ரதத்தை தடுத்துவிட்டு இங்கிருந்து இந்துக்கள் காசிக்கு புனிதபயணம் செய்வதை தடுக்கமுடியுமா?

திருவாரூர் தேரினை ஓடவைத்தவர் கலைஞர் என சமரசம் செய்து கொள்பவர்கள்தான் ராமர் தேர் ஓடகூடாது என மறிக்கின்றார்களாம்

யானை சிறுநரிக்கு அஞ்சலாமா? பகுத்தறிவாளர்கள் ஒரு தேருக்கு மிரளலாமா ?